Monday, January 18, 2010

இறை வழிபாடு !


ஹொண்டா சிடியில்
குடும்பம் சூழ...
கோவில் வந்து,
ஸ்பெஷல் தர்சனுக்கு,
ரூபாய் நூறு கொடுத்து..
அர்ச்சனை தட்டில்
ஐம்பது வைத்து...
போப்பா சில்லரை இல்லை
என்று விரட்டினான்
பிச்சைக் காரனை,
ஆண்டவன் வெகு அருகில்
இருக்கிறான் என்பதை
உணராமல் ..........!!!

7 comments:

Chitra said...

நெத்தியடி.

கமலேஷ் said...

ரொம்ப அழகா இருக்கு...வாழ்த்துக்கள்....

ரிஷபன் said...

விகடனில் ஒரு பக்கக் கதை வந்தது.. ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி கும்பிட வந்தவர் தரிசன நேரம் தப்பி வந்ததால் நொந்து கார் ஏறப் போனபோது.. எதிர்ப்பட்ட கிழிசல் வேட்டி பெரியவரை விரட்டிக் கிளம்பிப் போவார்.. பெரியவர் சிரிப்பார்.. ‘பாவம்.. தரிசனம் தரலாம்னு வந்தேன்..’

அண்ணாமலையான் said...

அட்டகாசம்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ராவுக்கும்,கமலெஷ்க்கும்,ரிஷபனுக்கும்,அண்ணாமலையானுக்கும்.....

மிக்க நன்றி..வருகைக்கும்..விமர்சனத்துக்கும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

azhako azhakana vishayaththai Nach endru naale varikaLil solli AANDAVANITAME azaiththuppoy vitteerkaLayya ennai. PaaraattukkaL.
Vai Gopalakrishnan

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா... வந்து விட்டீர்களா திரு வை.கோ !!
தங்கள் வரவு நல்வரவு ஆகுக!!