Tuesday, November 22, 2016

பணம் நீ அப்பா!

குறிஞ்சி....
மலையும்...மலை சார்ந்த 
நிசப்தமான இடம்....
எப்போதாவது பறவைகள் கத்தும்..
சுற்றிலும் குன்றுகள் ....மூலிகைசெடிகள், கொடிகள் ..
அதனால் திக்கெட்டும் கமழ கமழ மூலிகை மணம்!
இயற்கை தன் அழகு அனைத்தையும்,அங்கே கொட்டினார்போன்ற அற்புதமான ஆரண்யம்..
அங்கு கோலோச்சிக் கொண்டிருந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு கணீரென்று ஒரு குரல்!
ஆ....கோலூன்றிக் கொண்டிருந்த அந்த கிழவி தான் பாடிக் கொண்டிருக்கிறாள்..
அதோ...அந்த குன்றின் மீது ஒரு சிறுவன், அரை யணிந்து!
ஆஹா...அவன் முகத்தில் தான் என்ன ஒரு தெய்வீக களை!
அங்கு என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?
வாருங்களேன்...
போய் பார்ப்போமா?
ஒரு நிமிஷம்...
அதற்கு முன், இதனுடன் தொடர்புடைய சம்பவம் ஒன்று திருக்கைலாயத்தில் நடக்கப் போகிறதாம்...
முதலில் அங்கு செல்வோம்,நாம்!
----------------
திருக்கைலாயம்...
"நாராயண...நாராயண"
என்னது, திருக்கைலாயத்தில் நாராயண நாமமா?
ஆம்...
நாரதர் தான், விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருக்கிறார்...
இறையனாரின் தவம்  அந்த நாராயண ஸ்ம்ருதியில்   கலைய,கண்களை திறந்து பார்த்தார்..
"வா, நாரதா!" 
 கனிவு த்தும்பும் குரலில் வரவேற்றார், எமை ஆளும் ஈசன்!
பரஸ்பர குசல உபசாரங்கள் முடிந்ததும், நாரதர் தம் ஜோல்னா பையிலிருந்து எதையோ எடுத்து,பரமசிவனிடம் பணிவுடன் நீட்ட, உடனே அதை சிவ பெருமான் தன் புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு  கொடுக்க, மூஷிகத்தில் முழு முதற் கடவுளாம் வினாயகன்  செல்ல,  அதற்கு சற்றேறக்குறைய அரை நிமிஷ நேர மட்டில்  எம்பெருமான் இளங்கோ தன் மயில் வாகனத்தில் விருட்டென்று வேகமாக செல்ல.....அவ்வாறு அவர்கள் சென்றது தான் நம் ஊனக் கண்களுக்கு தெரிந்ததே தவிர, அவர்களுக்குள் அங்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை..
அதனாலென்ன...பரவாயில்லை..
தொடர்ந்து அருகில் சென்று அங்கு நடப்பதை கவனிப்போம்,வாருங்கள்..
இப்போது, நம் கண்களுக்கு  திருக்கைலாயம் மட்டுமல்ல..வினாயகப் பெருமானும்,ஆறுமுகப் பெருமானும் தெளிவாகத் தெரிகிறார்கள்..
வினாயகப் பெருமான் நிதானமாக  அந்த கட்டிடத்திற்கு செல்கிறார்...
ஆ..இதென்ன ...வினாயகப் பெருமானை விட இளவலிடம் துடிப்பு அதிகமாக இருக்கிறதே!..
மயிலிலிருந்து மயிலையில், சர்ரென்று இறங்கிய முருகன் அங்குள்ள பேங்குக்குச் செல்ல,அங்கு அனுமார் வாலை விடப் பெரிய கூட்டம்...
இவர் முறை வர, அரை நாள் ஆகி விட அங்குள்ள கேஷியர் இவரிடம் பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார்.
"முருகப் பெருமானே..முதலில் தங்களிடமுள்ள ...நாரத முனி தங்கள் தந்தையிடம் கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை டெப்பாசிட் செய்யுங்கள்..நாளைக்கு அதை நூறு ரூபாயாக நீங்கள் 'ட்ரா' பண்ணிக் கொள்ளலாம்...இந்தாருங்கள்..pay in slip பிடியுங்கள்  இதை fill up செய்து கொண்டு அந்த கவுண்டரில், டெப்பாசிட் செய்து விட்டு நாளைவாருங்கள்...OK.., next?"
என்று, அடுத்த ஆளை அட்டெண்ட்  பண்ண ஆரம்பித்தார்,அவர்!
கொடுத்த Pay in Slip ஐ தப்பும், தவறுமாய் fill up செய்து கொண்டு  அவர் சொன்ன கவுண்டர்  போய் பார்த்தார், திருமுருகன்.
"முருகா, தங்கள் PAN number?"
"PAN நம்பரா?"
"Permanent Account Number, முருகா!"
"அப்படி என்றால்?"
க்யூவில் பின்னால் நின்றிருந்தவர் முருகனின் தோளை தட்டி சொன்னார்...
"ஐயா, தமிள் கடவுளே, இங்கிருந்து, ஆறு கடை தள்ளி, ஆறுமுகம் அண்ட் கோ ன்னு ஒரு கம்பெனி இருக்கு..அங்ஙன போயி ஒங்க details ஐ கொடுத்தீங்கன்னா, ஆன்லைனில் ஒடனே அவிங்க அப்ளை பண்ணிட்டு ... ஒங்களுக்கு PAN Number அங்ஙனயே 
தருவாங்க...அதை வாங்கி கிட்டுத் தான்  இங்ஙன நீங்க வரணும், போங்க,போயிட்டு வாங்க!"
அவர் அதிர்ஷ்டம்...  PAN Number அடுத்த நாள் தான் கிடைத்தது.
இன்று க்யூ கொஞ்சம் தான், பரவாயில்லை...
தந்தை கொடுத்த அந்த ஆயிரம் ரூபாயை டெப்பாசிட் செய்தார்.
அதற்கு அடுத்த நாள் ஆதிசேஷன் போல நீ.......ளமாக இருந்த க்யூவில் கால் கடுக்க நின்று, பத்து பழைய நூறு ரூபாய் நோட்டுகள் வாங்கி,மயில் வாகனத்தில் மங்கள்யான் ஸ்பீடில் முருகன் கைலாயம் சென்றால், 
அங்கு இறையனார் சரக், சரக்கென்று புத்தம் புது பத்து நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்..
நாக்கில் நுரை தள்ள வியர்த்து, விறுவிறுக்க வந்த முருகனைப் பார்த்து,
" வா....முருகா, வா...நீ வேகமானவன்..பேங்குக்கு சென்று மாற்றிக் கொண்டு வருகிறாய்...ஆனால் உன் அண்ணன் வினாயகன் இருக்கிறானே, அவன் உன்னை விட விவேகமானவன்..அவன், வெகு சுலபமாய் என் பெயருக்கு அவனிடம் கொடுத்த ஆயிரம் ரூபாயை இங்கு பக்கத்தில் உள்ள கைலாசபுரம் போஸ்ட் ஆஃபீசில் மணி ஆர்டர் செய்து விட்டு, முந்தா நாளே தன் வேலையைப் பார்க்க போய்  விட்டான்..அவன், M.O. அனுப்பிய அந்த ஆயிரம் ரூபாயை போஸ்ட் மேன் இப்போது தான் பத்து புத்தம் புதிய தாள்களாக, என்னிடம் கொடுத்து விட்டுச் செல்ல, அதைத் தான், எண்ணிக் கொண்டிருக்கிறேன்...நீயானால், சுத்தமாக இரண்டு முழு நாட்களை வேஸ்ட் செய்து விட்டு வருகிறாய்...."
பரமன் சிரித்துக் கொண்டே சொல்ல,
முருகனுக்கு ரோஷமான ரோஷம்!
கண்கள் இரண்டும் ஜிவ்வென்று சிவக்க...
கோபத்துடன், அரையில் வெறும் கோமணத்துடன், 
மலை மேல் ஏறி விட்டான், குழந்தை!
எவ்வளவு நாள் பசியும், பட்டினிமாக அங்கு கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறானோ?
..........
இதோ...
முதலில் நாம் கண்ட அதே காட்சி!
அமுதினைத் தோற்கடிக்கும் தீந்தமிழில் கணீரென்று ஔவை பாடிக் கொண்டு இருக்கிறாள்..
ஔவை தந்த தமிழினால் கோபம் மறைந்து,சற்றே கண் திறக்கிறான் முருகன்!
அன்பு மணம் கமழும் ஔவை முகத்தை பார்க்க பார்க்க.. அந்த அறுபடை வீடு கொண்டவனின் அழகு முகமும் கொஞ்ச நேரத்தில்,சாந்த ஸ்வரூபம் ஆயிற்று...
 இதோ..ஔவை பாடிய அப் பாடல், மலையில் மோதி எதிரொலிக்கிறது...
"பணம் நீ அப்பா!
ஞான பணம் நீ அப்பா!!
தமிழ் ஞான பணம் நீ அப்ப்ப்..........பாஆஆஆஆ!"
                                   .......சுபம்............




  





Thursday, November 3, 2016

தத்துவ விசாரம்!

ஆராரோ எனை ஆர்ஆர்ஆர்  என்றழைக்க,
ஏஆரார் என்று மற்றுமவர் கூச்சலிட,
'மூவாரே நீரெ'னமூன்று நான்கு பேர் கூவ,
'ஆரடா இவன்?' என எனைநான்  அறிந்திலேனே!
...................
என்னிலே என்னை நான் 
உணர்ந்து  கொண்ட,
வேளையில்,
விண்ணிலே ஒளிருமவ்
விண்மீன் போலாச்சுதே!
மண்ணிலே வந்துதித்த,
மாந்தர்க்கு சாபமாம்..
உன்னிலே உன்னை நீ,
உணராமலிருப்பதே!




கோவை தந்த நட்புகள்!


"ஹல்லோ..யார் பேசறது?"
"ராம மூர்த்தி"
"ராம மூர்த்தின்னா?"
"ஆரண்ய நிவாஸ்!"
"ஆர்.ஆர்ஆரா...ஹ்ஹ்ஹா..சௌக்யமா?"
"சௌகர்யம் சார்...இப்பத் தான்,நம்ம கோபாலகிருஷ்ணன் சார் சொன்னார்...நீங்க வந்திருக்கீங்கன்னு..இது அவர் போன்லேர்ந்து தான் பேசறேன்..அதான்.."
"ரயில் ஏறியாச்சு...அடுத்த தடவை நாம் சந்திக்கலாம்.."
கந்தசாமி சார் எனக்கு பிலாக்கில் அறிமுகம்...'சாமியின் மன அலைகள்' என்ற பிலாக்கில்  ஹ்யூமராக எழுதுபவர்...அதிலும் அவருடைய டைமிங் காமெடி மாஸ்..'நமக்கு நாமே திட்டம் மாதிரி,சுயமாக ஹேர் கட் செய்து கொள்வது எப்படி?' என்று படு அசத்தலாக எழுதியிருக்கிறார்..
பொதுவாக, Face Bookல் எழுதுவது ஒரு மாதிரி...Blog ல் எழுதுவது வேறு மாதிரி...Face Book ல் wide readability கிடைக்கும்..ஆனால், ஒவ்வொருவருக்கும் நெருக்கம் இருக்காது..ஹலோ..ஹலோ...தான்..
ஆனால், Face Book அளவிற்கு Blog கிற்கு Mass attraction கிடையாது..இருந்தாலும், அதில் இருக்கும் நட்பு ஆழமாக இருக்கும்...என் அனுபவம் இது!
    சார், அக்ரிகல்ச்சர் காலேஜ்ல ரிடையர்ட் ப்ரபஸர்..மண் வள பரிசோதனையில் டாக்டரேட்...இஸ்ரேல்,நெதர்லாண்ட்ஸ்,யுஎஸ், பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுக்கு சென்றவர்...
எளிமையானவர்....அதற்கும் மேல் அன்பானவர்!
    அடுத்த முறை கோயம்புத்தூர் சென்ற போது, கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர், கந்த சாமி சார் இவர்கள் இருவரையும் சந்திப்பதற்காக ப்ளான்.கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர் "வாங்கோ!" என்றார்...      
நண்பர் கோபால கிருஷ்ணனிடமிருந்து கந்தசாமி சார்  நம்பர் வாங்கி பேசினேன்..'ட்ரைவிங் ல இருக்கேன்,அப்புறம் பேசறேன்' என்றார்..அப்புறம் பேசினார்..
"எத்தனை நாள் இருப்பீர்கள்?"
"நாளைக்கு கிளம்பறேன்.."
"நோ சான்ஸ்!"
இது தான் எங்கள் உரையாடல்!
நண்பர் கிருஷ்ண மூர்த்தி கிருஷ்ணையரைப் பார்த்தேன்...முன் பின் தெரியாத எங்கள் மேல் அவருக்குத் தான் என்ன ஒரு வாத்ஸல்யம்...சுவையான அனுபவம்  அவரை சந்தித்தது..அவர் அஹத்தில் மாமி கொடுத்த டீ  அதை விட சுவையானது! இன்னமும் நாவில் இனிக்கிறது...மறுபடியும் அவரை பொன்னி டெல்ட்டாவில் மல்லாடி கச்சேரியில் பார்த்தது, மறக்க முடியாத அனுபவம்...நொச்சியத்தில் நடந்த சண்டி ஹோமத்திற்கு கோவையிலிருந்து வந்திருக்கிறார், மனிதர்! மஹாப் பெரியவாள் மீது, அளவு கடந்த பக்தி, அவருக்கு. நொச்சியம் எனக்கு வெகு சமீபம்..'க்ஷத்ராடன பாவியாகி விட்டோமே'என்று என் மீது எனக்கே வெறுப்பு...இவரை, நம்ம கோபால கிருஷ்ணனுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்..அவரும் தம் பிலாக்கில் மஹா பெரியவர் பற்றி படிப்பவர் மனம் கசிய எழுதியிருக்கிறார்..இருவரையும் பேச விட்டு மஹாபெரியவாளின் காருண்யத்தை காது குளிர கேட்க வேண்டுமென ஒரு ஆசை ...ம்..பார்ப்போம்!
இந்த முறை கோவை வந்த போது கந்த சாமி சாரைப் பார்ப்பதாகப்   ப்ளான்..பயந்து கொண்டே தான், போன் பண்ணினேன்..'நான், எதிர்பார்த்தது போல, ட்ரைவிங்கில் இருக்கிறேன், பிறகு பேசுவோம்' என்றார்.
செல் போன் அடித்தது, மாலையில்..
"ஹலோ...கந்த சாமி பேசறேன்..கோவையில் எத்தனை நாள் இருப்பீர்கள்?"
"வெள்ளிக்கிழமை வரை!"
"அப்ப நாளைக்கு நாம மீட் பண்ணுவோம்...அன்னபூர்ணாவில் ப்ரேக் பாஸ்ட்..எங்கே தங்கி இருக்கீங்க?"
"தாமஸ் பார்க் பஸ் ஸ்டாண்ட் பக்கம்!..நாம் வேணா வழி சொல்லட்டுமா?"
"வேண்டாம்...எனக்கு தெரியும்..கூகுள் மேப் சர்ச் பண்ணி ஷார்ப்பா எட்டரைக்கு வந்து விடுவேன்"
வாக்கிங் போய் விட்டு, நாங்கள் எட்டு மணிக்கு வரும் போது, கெஸ்ட் ஹவுஸில் அவர் எங்களை வரவேற்றார்.
Punctuality maintain பண்ணுவது பெரிய விஷயம்! அதற்கு அரை மணி நேரம் முன்பு. வருவது ..மேன்மக்களால் மட்டுமே சாத்யம்!
அவருடனான சந்திப்பு இனிமையானது..
அவருக்கு கர்னாடிக் ம்யூஸிக் பிடிக்கும்....மதுரை மணி,ஆலத்தூர் ப்ரதர்ஸ். பிடிக்கும்..நிறைய தேவன் கதைகள் படித்தது தான் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு அடித்தளம் என்றார்..அவருடைய பெண் சிங்கப்பூர் போயிருக்கும் போது, தனக்கு வாங்கி வந்த pen drive பற்றிக்கூறினார்...அவருடைய Technology updation எனக்கு உண்மையிலேயே ப்ரமிப்பை தந்தது...எல்லாவற்றையும் விட அவருடைய படு ஸ்டைலான ட்ரைவிங்...வெகு confident...வெகு நேர்த்தி!
விடைபெறும் போது அவர் சொன்னார்...
".....ப்ரெண்ட்ஸ் நிறைய பேர்  'துபாய்க்கு வா'ங்கறாங்க...போணும்னு ஆசையாகத் தான் இருக்கு...ஆனா , 'உனக்கு இந்த கோவையை சுற்றி இருபது கிலோ மீட்டர் போக வரை தான் விஸா..'ன்னு என் பொண்ணு ஆர்டர் போட்டிருக்கா" 
  சொன்ன கந்தசாமி என்ற அந்த இளைஞர்  வயது எண்பத்திஇரண்டு!
   .............,