Friday, August 26, 2016

இப்படி ஒரு விபரீத ஆசை எனக்கு!

அன்பானவர்களே!
முதலில் ஒரு family tree construct செய்ய ஆசை.
பார்ப்போம்....
அதற்குள்  இன்னொன்றும் தோன்றியது...
ஆனந்தரங்கம் பிள்ளை தமிழ் போல இப்படி ஒரு டாக்குமெண்ட் நாமே பண்ணினால் என்ன என்று?
அதாவது,
பத்தொன்பது,இருபதாம் நூற்றாண்டுகளில், நம் நினைவில் நிற்கும்/நீத்தார் உறவு பற்றிய சில சுவையான நிகழ்வுகளை ஒரு சிறுகதை வடிவில்  செய்யலாமே...மொத்தம் எட்டு கேரக்டர்ஸ் .அப்பா வழியில் எட்டு, அம்மா வழியில் எட்டு என்று இரண்டு சிறுகதை தொகுப்புகள்.
அதுவும் அந்தந்த கேரக்டரே narrate செய்வது போல...(உதாரணத்திற்கு  ஆங்கரை தாத்தாவே நம்மோடு பேசுவது போல) 
அதில், ப்ரைவசி வேண்டாம். குடும்ப ரகசியம் வேண்டாம்...அந்தரங்கம் புனிதமானது. அது வழிவழியாய் மனத்தளவில் ஒவ்வொருவராய் எடுத்து செல்ல வேண்டிய ஒன்று! அதை தவிர அந்த உறவினர் பற்றி பெருமையாய் பேசப்படும் சந்தர்ப்பங்கள் எத்தனை? எத்தனை? 
அந்தந்த காலத்து சம்பவங்கள்...ஊடே அந்தந்த காலத்து அரசியல் நிலை...(கல்கியின் தியாகபூமி போல!) சுவை கூட்ட கொஞ்சம் கற்பனை கலந்து..exaggeration  என்பது இல்லாமல்...
இதில் photo இருக்காது...ஆனால், அந்த கேரக்டர் அச்சு அசலான  சாயலில் சித்திரமாக இருக்கும். 
இதில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றும் இருக்கிறது. உங்களுக்கு அந்தந்த முன்னோர்களுடன் நீங்கள் feel செய்த சம்பவங்களை என்னுடைய/Lakshminarayanan Rajagopalan இன்பாக்சில் அனுப்பினால் document செய்து கொள்கிறோம்.
'எந்த ஊரில், எந்த நாளில், எங்கு காண்போமோ?' என்கிற ஏக்கத்தை உடைத்து தூள் தூள் ஆக்கி விட்டதே  இன்டர்நெட்! ஆகவே நம் முந்தைய தலைமுறை பற்றிய நம் அனுபவங்களை நாம் அடிக்கடி share செய்து கொள்ளலாமே!
அத்தனை சிறுகதைகளையும், Father related/Mother related family gathering ஒன்று நடத்தி, எல்லாருடைய wishes உடன்(நமக்கு தெரியாமல் ஏதாவது விட்டுப் போனது இருந்தால்)சேர்க்கலாம். Private Circulation ஒவ்வொரு குடும்பத்திற்கும், சிறுகதை வெளியிட்ட பிறகு பத்து,பத்து பிரதிகள்!
இப்போது, எனக்கு ஐம்பத்தொன்பது வயது ஆகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் நமது சென்ற தலைமுறையினர் இருக்கிறார்கள்..இந்த யக்ஞத்தில் அவர்களுடைய participation நிச்சயம் நமக்கு வலு கூட்டும் என்று நம்புகிறேன்.
இந்த ப்ராஜெக்ட் குறைந்தது மூன்று வருடங்களாவது இழுக்கும்.
இப்போதிருந்து Data collect செய்து கொள்ளலாம்...
இந்த ப்ராஜெக்ட்க்கு இன்ஸ்ப்பிரேஷனே நண்பர் Narayanan Bala அவர்கள் அவயாம்பா என்ற என்னுடைய முற்றிலும் கற்பனையான சிறுகதைக்கு கொடுத்த உணர்வு பூர்வமான விமர்சனம் தான். மிக்க நன்றி Narayanan Bala sir.
அப்புறம் யோசித்துப் பார்த்ததில், private circulation எதற்கு? Public circulation சிறுகதைகளே வெளியிடலாம் என்று தோன்றியது. ஒவ்வொருவர் வீட்டிலும் அவயம்,அம்புஜம்,கிட்டு,சீனு,ராமையா,ஶ்ரீமதி,ப்ரணதார்த்தி,குஞ்சம்மா என்று நிறையவே இருப்பார்கள்.அவரவர் பெயருக்கேற்றார் போல அவரவர் குணங்கள்!
உதாரணமாக  எனக்கு பட்டுப் பெரியம்மா...உங்கள் குடும்பத்தில் அது பட்டு அத்தை, பட்டு மாமி,பட்டு அக்கா என்று இருக்கலாம்...மேலும் பட்டு என்ற பெயரே ஒரு குடும்ப சுமைதாங்கியாக...ஒரு தியாக சீலராக...அன்பே ஓர் உருக் கொண்டாற் போல ...நம் பெரும்பாலான குடும்பங்களில் generalise ஆகவில்லையா Gurumurthy
எதற்கு இவ்வளவு ப்ப்ளிக்காக இதை நான் சொல்கிறேன் என்றால், நம்மில் நிறைய பேருக்கு எழுத வருகிறது. ' நம் தாத்தா, பாட்டிகளை பற்றி நாம் எழுதியதை நம்முடைய கொள்ளுப்பேரன், கொள்ளு பேத்தி என்று நாளைக்கு யாராவது ஒருவர் படிக்க மாட்டார்களா?
தளிர்கள்  என்றாவது ஒரு நாள் தம்தம் வேர்களை பார்க்காதா?
நாம் விட்டுப் போகும் இத்தகைய 'பொக்கிஷங்கள்' இன்றைய எலக்ட்ரானிக்ஸ் சூழலில் நமக்குப் பிறகு ஒரு இருநூறு,முன்னூறு வருடங்களாவது பயணிக்காதா?'
என்கிற பேராசை தான்!