Friday, July 29, 2016

பல்லுக்குப் பல்! சொல்லுக்கு சொல்!!



வாசல் கேட்  க்ரீச்சிட்டது ...
வந்தவன் ராம்குமார் ...
ராம் குமாரே தான்!
அவர் பெண் ஸ்வேதா தான் அவனை அறிமுகப்படுத்தியது.
ராம்குமார் ஸ்வேதா ஆபீசில் அவளோட வேலை  பார்க்கிறவன்..
In fact அவளோட டீம் லீடர்...
படு ஸ்மார்(த்த)(ட்டான) பையன்!
சொந்த ஊர் திருவிடை மருதூர்......
ஆரவாமுதன் வலங்கை மான்.
ஐயங்கார்!
வாரம் தவறாமல் இரண்டு தடவை வந்து விடுவான். வரும் போது போன் செய்து விட்டுத் தான் வருவான். நல்ல குணம்.செவ்வாய் கிழமை,வெள்ளிகிழமை 
ஏழு மணிக்கு அவன் வருவதை வைத்து செல்லில் டைம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். அவ்வளவு பங்க்சுவல். அதைப் போல, எட்டரை மணிக்கு 'டின்னர் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்று ஆன மட்டும் சொன்னாலும் கேட்க மாட்டான். 'அம்மா பசியோடு காத்துக் கொண்டிருப்பாள்' என டாணென்று கிளம்பி விடுவான்.
வழக்கமாக அவனுக்காக ஆரவாமுதன் மூன்று பட்டணம் பகோடா ப்ளஸ் டிக்ரி காபியுடன்
காத்துக் கொண்டிருப்பார்..
இரண்டு மாதங்களாக  அவனைக் காணோம்!
அவரும் ஸ்வேதாவை கேட்கவில்லை. எங்காவது on sight போயிருப்பான்! 
ஆனால், அவன் வராதது தான் அவருக்கு எதையோ பறி கொடுத்தாற் போல இருந்தது.
இன்று அத்தி பூத்தாற் போல அவனிடமிருந்து போன்!
இதோ அவனே வந்து விட்டான்..அவருக்கு ஏக சந்தோஷம்!
இன்று அவனுக்காக சமையல் கார மாமியிடம் சொஜ்ஜி, பஜ்ஜி ஸ்பெஷலாக செய்ய சொல்லி இருந்தார்.
பஜ்ஜியும்,சொஜ்ஜியும் சூடாக இருந்தது.
ஆனால்,வந்த ராம் குமாரோ அதை விட சூடாக இருந்தான்!
வந்தவன் சேரில் உட்காரக் கூட இல்லை!
"இரண்டு மாசமா, நான் வரலியே,,ஏன் வரலைன்னு கேட்கக் கூட ஒங்களுக்கு தோணலை?"
"எங்காவது பெல்ஜியம்,ஹாலண்ட்னு ஆபீஸ் வேலையாய் டூர் போயிருப்பாய்..முதல்ல உட்காரு அப்பா.."
"ஸ்வேதா ஏதாவது சொன்னாளா?"
"அவளிடம் நான் எதுவும் கேட்கவில்லை!"
"ரெண்டு மாசமா நான் இங்கே வந்துண்டிருக்கேனே..எதாவது பேசி இருக்கேனா, நான்?"
"நீ பேசலை..நான் தான் எதாவது பேசிண்டு...இப்ப அதுக்கென்ன? வா..உட்கார்,,,சூடா பஜ்ஜி, சொஜ்ஜி உனக்காக காத்துண்டு இருக்கு..வா, சாப்பிடு.."
"அது இருக்கட்டும், நான்...."
"நீ எதுவும் பேச மாட்டே..'உம்'னு கேட்டுண்டு இருப்ப..நான் தான், டிபன்ஸ் அக்கவுண்ட்ஸ்ல அந்த காலத்துல,நடந்த கதை எல்லாம் சொல்லிண்டு இருப்பேன்..மீரட் ல, நான் இருக்கறச்ச, நாலாவது வெள்ளிகிழமை பேங்க்ல விதட்ரா பண்ணின பணம், திங்கள் கிழமை சாலரி டிஸ்பர்ஸ்மெண்டுக்கு வரும்..லெட்ஜர் போஸ்டிங் திங்கள் கிழமை ஆகி இருக்கும்...ஆனா,பாஸ்  புக்ல வெள்ளிக் கிழமை என்ட்ரி! கேட்டால், போஸ்டிங்  போட மறந்துடுச்சும்பான்...அது எப்படி இரண்டு மாசத்துக்கொரு தடவை மறக்கும்?
அந்த சனி,ஞாயிற்றுக் கிழமை அக்கவுண்டண்ட்டும், கேஷியரும் ஜோடி சேர்ந்துண்டு, அந்த கேஷை ரொட்டேஷன்  விட்டு, கொஞ்சம் காசு பார்த்ததை நான் கண்டு பிடிச்சேன் ..அதுக்கு எனக்கு பரிசு  ஜபல்பூர் ட்ரான்ஸ்பர்....ஜபல்பூரில.."
"போதும்...நிறுத்துங்க...இந்த ரெண்டு மாசமா நான் உள்ளூரில தான் இருந்தேன்.."
"பின்ன ஏன் இங்கே வரலை?"
"ரெண்டு மாசம் முன்னால நான் ஸ்வேதாட்ட ப்ரபோஸ் பண்ணினேன்.."
"அடப் பாவி!"
நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயற்சி செய்தார்,ஆரவாமுதன்!
"பொறுங்க ....ஆனா, அவ என்னை ரிஜக்ட் பண்ணிட்டா...அதனால.."
"அதனால?"
"செவ்வாய் கிழமையும், வெள்ளிக் கிழமையும் இனி மேல் ரொட்டீனா இங்கே வருவேன்.."
"வந்து?"
"எப்ப ஒங்க பொண்ணு என்னை வேண்டாம்னு சொல்லிட்டாளோ, அதனால இனிமேல் என் டர்ன்!"
"அப்டீன்னா?"
"இங்கே வந்து நான் இனிமேல் எங்க ஆபீஸ் ப்ரதாபங்களை ஒங்க கிட்ட அளந்து விடுவேன்...நீங்க எப்படி நான் அப்ப 'உம்' 
கொட்டினேனோ...அது போல  இனிமேல் நீங்க எனக்கு 'உம் ' கொட்டணும்!"
............





Monday, July 25, 2016

தொழில் தர்மம்!

"யோவ்..நில்லு!"
"நிக்கறேன்"
"இன்னா...அந்த பக்கத்தில இருக்கோங்கற தெனாவட்டா?"
"ஒம் பக்கத்தில் நின்னாலும் அப்டி தான் இருப்பேன் ராஜா..என் இயல்பு அது!"
"மவனே, ஓவரா பேசற நீ, பைல என்ன?"
"ஆனந்த விகடன்,மங்கையர் மலர்,குமுதம் ஜோதிடம் "
"யோவ்...பர்ஸ்ல எவ்ளவ் வச்சிருக்கே?"
"பஸ்சுக்கு காசு...காலைல சில்லறை இல்லைன்னு கண்டக்டர் கொடுத்த இரண்டு ஹால்ஸ்"
"கய்தே....கிண்டலா பண்ற? ..பர்ஸ்ல துட்டு  எவ்ளவ் வச்சிருக்கேன்னு கேட்டா.."
"அதான் சொல்றேன்ல....மூணு க்ரெடிட்  கார்டு, ரெண்டு டெபிட்  கார்டு இருக்கு...மொத்தம் ஆறாயிரம் ரூபா நெட்டா சம்பளம் க்ரடிட் ஆச்சு..ஆயிரம் ரூபாய் பேங்க் கொள்ளைகாரனுக்கு மினிமம் பேலன்ஸ் வச்சுட்டு,இல்லாட்டி அவன் அம்பது ரூபா டெபிட் பண்ணிடுவான்...பாக்கி ஐயாயிரம் ATM ல இருக்கு, எடுத்துக்க"
"சாவு கிராக்கி...மோதிரம் செயின்னு எதனாச்சும் ..."
"அல்லாத்தையும்  safest safety lockerல அதாம்பா அடகு கடைல வச்சிருக்கேன். அவனுக்கு இருக்கற insurable interest பேங்க் காரனுக்கு கூட கிடையாது"
"இன்னா கஸ்மாலம்  ஸொல்ற நீயி?"
"தோ பாரு..ஒனக்கு ஒரு எழவும் புரியாது..பக்கத்துல எதனாச்சும், ATM இருக்கா..வா..எடுத்து தரேன்..எனக்கும் பஸ்சுக்கு டைம் ஆச்சு...ஒன்னோட பேசிண்டு இருக்க எனக்கு நேரமில்லை!"
"ஓங்கார்டு தானா...அது, இல்லாங்காட்டி.."
"மெய்யாலுமே எங் கார்டு தான்பா, ஒனக்கு கொடுக்கறதுல எனக்கு என்ன இன்ட்ரஸ்ட்னு கேக்கறியா? சம்பள பணம் திருட்டு போச்சுன்னு ஒரேடியா நிம்மதியாவாவது இருப்பேன்.."
"இன்னாபா ஸொல்ற நீயி....ஒன் சம்பளம் எவ்ளவ்? எப்டி குடித்னம் நடத்துறே?ஆளை பார்க்க ரீஜண்டா வேற கீற!"
"அப்டீ கேளு வாத்யாரே! எனக்கு மாசம் லட்சத்து இருபதாயிரம் ரூபா..சம்பளம் வர்ரது!"
"அடேங்கப்பா.."
"பதறாதே..சொச்சத்தையும் கேளு..அதுல வருமான வரி இருபதாயிரம் எடுத்துட்டு தான் பாக்கி தரான்..அப்புறமா பிஎப் பத்தாயிரம்,க்ரடிட் கார்டுக்கு பதினைஞ்சாயிரம்,கார் லோன் முப்பதாயிரம், வீட்டு EMI முப்பத்தைஞ்சாயிரம்,போன மாசம் வாங்கின ஹேண்ட் லோன் நாலாயிரம் ரூபா போக பாக்கி சம்பளம் ஆறாயிரம் ..இதுல மாசம் பூரா ஓட்டணும்..ஒரு wife மூணு பசங்க....புலி வாலை புடிச்சிகிட்டு இருக்காப்ல தான் ஒவ்வொரு நாளும் போறது!"
"யோவ்..நானே கைல ரொக்கமா பத்தாயிரம் வச்சிருக்கேன்யா"
"அப்ப எனக்கு ஐயாயிரம் தாயேன்..சும்மா நீ ஒண்ணும் தர வாணாம்..வட்டி எடுத்துக்க..அடுத்த மாசம் தந்துடறேன்"
"வாணாம்...ஒன்னயப் பார்த்தா தான் பாவமா கீது வாத்யாரே! இந்தா அல்லாத்தையும் நீயே வச்சுக்க..திருப்பி தர வாணாம்..நான் திருடன்...சமுதாயத்தில ரொம்ப கீள இருக்கற ஆசாமி..நா, எப்டியாவது பொளைச்சுக்குவேன்.."
"உன்னைப் பார்த்தா தான் பாவமா இருக்கு, எனக்கு ! ஒங்கிட்ட காசு வாங்க முடியாத ...கௌரவம் தடுக்கற ....நடுத்தர வர்க்கம்பா நான். ஆமா, திருடனா நீ?அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருக்கியே..இப்படி வரவன்,போறவன்...எங்கள மாதிரி ஆபீஸ் காரங்க கிட்ட, திருடின காசை கொடுத்துட்டு அம்போன்னு இருந்தா, நீ எப்படி அப்பா பொழைக்க முடியும்? உங்க வீட்ல எப்படி அடுப்பெரியும்?"
"அதுக்காக? தொளில் தர்மம்னு ஒண்ணு இருக்கில்லே? திருடனா இருந்தாலும்  அத்த நான் மீற முடியுமா?"
"ஆமாம்..ஒம் பேரு!"
"அந்த களுதைய இப்ப எதுக்கு கேட்கறே நீயி?"
"சும்மா சொல்லு...நா தெரிஞ்சக்கறேனே ..உன் பெயரை!"
"கிஞ்சித்தும்பாங்கபா நம்மள! பக்கிரி புள்ள கிஞ்சித்து..ப.கிஞ்சித்து!"
................



                          













Sunday, July 24, 2016

தத்வ ம(ச்)சி!


டி.வி.ல வர்ற வெளம்பரங்க அல்லாத்தையும் பாருங்க....உத்து உத்து கவனிங்க....ஆனா, எதையும் நம்பி ஆர்டர் பண்ணாதீங்க!
ஆர்டர் பண்ணினீங்க.....
அம்புட்டு தான்!!
உதாரணத்துக்கு ஒண்ணு!
ஓல்டு ஏஜ் பேரடைஸ்!
தனி தனி ஊடுங்க......காமன் டைனிங் ஹால்.....ரிச் வெஜ் மீல்ஸ்...ரீடிங் ரூம்....பிட்னஸ் பார்க்...
கர்னாடிக் ம்யூசிக்.....கம்யூனிட்டி சென்டர்....டெம்பிள் விசிட்...டாக்டர் விசிட்...வீணை, தவில், தம்புரா...ப்ளூட்டு...புல்லாங்குழல்..
அல்லாமே, வெறும் அறுபது லட்சம்னு தான்னு சொல்லி ஒங்க காசை அல்லாத்தையும் புடுங்க ட்ரை பண்ணுவாங்க...
அங்ஙன தான் நாம உஜாரா இருக்கணும்!
அதுக்கு பதிலா...
LKG,UKG போற பச்ச மண்ணுங்க...அத்த கூட்டிட்டு போற தாய்மாருங்க...ப்ளஸ் டூ பசங்க...காலேஜ் கேர்ள்ஸ், ஆபீஸ் கோயர்ஸ், நடுத்தர வயசு...இப்டி அல்லாரும் கலந்து கட்டி இருக்கற இடத்தில வூட்டை வாங்கி போடுங்க...
வாள்க்கை லவ்லியாவும், லைவ்லியாவும் போகும்!
நான் வடக்கு ஆண்டார் வீதில இருந்தப்ப, ஜனங்கலாம் கலந்து கட்டி இருந்ததுங்க..
எங்க க்ரூப் படிச்சு வேலை வெட்டி இல்லாத பட்டதாரிங்க ஒரு ஆறேழு பேரு அப்படியே, ஆண்டார் வீதி நெ.1 
வீட்டுக்கு ஒரு க்ரூப்பா போவோம்..
அடுத்த அஞ்சு நிமிஷத்துல அங்க நம்ம போஸ்ட் மேன் வருவாரு...அவரு வூட்டுக்கு வரதுக்கு நாளியாகும்...நாம இங்ஙன ஆண்டார் வீதி மொகணை போனா, 'மாடும் மேச்சா மாதிரி ஆச்சு..மச்சின்னுக்கும் பொண்ணு பாத்தா மாதிரி ஆச்சு'ன்னு மல்டி பர்ப்பசா வேலை நடக்கும்..
எங்க க்ரூப்பை பார்த்ததும், "தம்பிங்களா, நாளைக்கு ஒங்களுக்கு ஆர்டர் தரேன்..என்று பாசிட்டிவ் வாக சொல்லிட்டுப் போவாரு, அவரு வழக்கம் போல..
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வரவில்லை என்பதற்காக, disappointment ஆகாமல், ஆபீசுக்கு லொங்கு லொங்கு என்று பின்னங்கால் பிடறியில் பட ஓடும் அக்காகளுக்கு 'டாடா'காண்பித்து விட்டு, அப்படியே சங்கரம் பிள்ளை ரோடு வந்தால், அன்ன தான சத்திரம் வரும்...அங்கு எனக்கு கொஞ்ச நாள் கழித்து, ஒரு விபத்து...இன்று வரை எனக்கு இருக்கும் ஊமை காயங்கள்...இதை தவிர,  'காற்றில் இணை கையை தூக்கிக் கொண்டு வர, அதனை அப்படியே கன்னத்தில் வாங்கும் கலை'யை எனக்கு கற்றுக் கொடுத்த அஸ்திவாரம் அது என நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்...அதனை தனிப் பதிவாக பிறிதொரு சமயம் எழுதுகிறேன்...
   எங்கே விட்டேன்...ஆ..சங்கரம் பிள்ளை ரோடு..அங்ஙன சமயபுரம்,மணச்ச நல்லூர்,லால்குடி,ஜீயபுரம் ஊர்களிலிருந்து SR காலேஜ் வரும் பெண்களுக்கு வலிப்பு காட்டி விட்டு,பிறகு அப்படியே பட்டர்ஒர்த் ரோடு, வடக்கு ஆண்டார் வீதி உள்ளூர் பெண்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்து படுத்துக் கொண்டு டிஃபன் சாப்பிடுவோம்..(ஊட்ல 'வேலை வெட்டி இல்லாம, உட்கார்ந்துண்டு சாப்பிடறது பாரு'ன்னு யாரும் நம்மள சொல்லக் கூடாது, அதான்!)
அப்ப எளுதின கவிதை ஒண்ண வாசிக்கறேன், கேளுங்க..
        பட்டத்தை 
        பறக்க விட்டு,
        பரதேசி போல்,
        முடி வளர்த்து,
        பக்கவாட்டில்,
        கிருதாவை,
        பாங்குடனே,
        வளர்த்து விட்டு,
        இஞ்சி தின்ற 
        குரங்கு போல்,
         எப்போதும் முகம் 
        தொங்கி,
        கடை வீதி,
        நடந்து சென்றால்,
        ஜவுளி கடை 
        பொம்மை கூட,
        சட்டென,
        திருப்பி கொள்ளும்!
சமீபத்தில் நான் unemployed graduate ஆக இருக்கும் போது  திட்டு வாங்கின PU படித்த இளஞ்சிட்டு ஒன்றை எதேச்சையாக சந்தித்தேன்...
       தலை நரைத்து, விந்தி விந்தி நடந்து உடம்பு எக்கசக்கமாய் ஊதிப் போய் இரண்டு டிபன் பாக்சுடன் காமகோடியில் Lkg, ரெண்டாங்க்ளாஸ் படிக்கும் பேரன், பேத்திகளுக்கு ஊட்டி விட போய் கொண்டிருந்தாள்..
     'இன்னும் தாத்தா ஆகவில்லை' என்று தோள்களை குலுக்கிக்கொண்டு நடந்தேன்.
எதற்கு இவ்வளவும் சொல்கிறேனென்றால், அன்று நாங்கள் ..அன்றென்ன இன்றும் பலதரப்பட்ட மனிதர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
அத்த விட்டுட்டு, கரன்சியால காது குடையற வசதி வந்தால் கூட ..அங்ஙன..அதாங்க அந்த old age segment ல போய் மாட்டிக்காதீங்க!
வாள்க்கை காத்து போன பலூன் போல புஸ்ஸுனு போயிடும்!
ஏதோ,இன்னிக்கு ஒங்க எல்லாரும் இத்த சொல்லணும்னு தோணிச்சு!
அம்புட்டு தான்!
வா......ரே.....ன்!!

Saturday, July 23, 2016

பழிக்குப் பழி!

மெய்ஞானம் கண்ட குருவானவர் மெள்ள நடந்து கொண்டிருக்க, சீடர்கள் அவரை மௌனமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்...
ஆறு ஒன்று குறுக்கிட்டது..
குரு நீந்தி கொண்டிருக்கிறார்...
சீடர்கள் தொடர்கின்றனர்...
அப்போது...
'என்னை காப்பாற்றுங்கள்'...
தீனமாய் ஒரு குரல் ..
அழகிய இளம் பெண் ஒருத்தி ஆற்றில் மூழ்கி கொண்டிருந்தாள்..
மனதை கல்லாக்கிக் கொண்டு குரு நீந்தி கொண்டிருக்க, சீடன் ஒருவன் அந்த பெண்ணை தன் முதுகில் தூக்கிக் கொண்டு, கரை சேர்த்தான்...
ஏகத்துக்கு தண்ணீர் குடித்து உப்பிப் போயிருந்தாள் அவ்வழகிய இளம் பெண்..
பக்கத்தில் ஒரு பாறையில் அவளை மல்லாக்க கிடத்தி, வயிற்றிலும்..மா..
தகுந்த முதலுதவி செய்து, திரும்பி வந்தான் அந்த சீடன்...
ஒரு வாரம் கழித்து குரு மெலிதான குரலில் அவளைப் பற்றி கேட்க, சீடன் சொன்னான்..
"குருவே, இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?"
இதுவல்ல கதை!
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகி இருக்கும்..
இப்போதும் குரு நடந்து கொண்டிருக்கிறார்..
சீடர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர்..
ஒரு அசந்தர்ப்பமான இடத்தில் குருவின் எதிரில் அவருடைய பூர்வாசிரம வூட்டுக் கார அம்மாள் 
எதிர்பட்டாள்.
"இன்னாய்யா...ஒன்ன எங்கெல்லாம் தேடறது?"
நிராயுதபாணியாக குரு நிற்க, அவருடைய உத்தரீயத்தை கோர்த்து பிடித்தாள் அவள்.
குருவின் முகத்தில் ஈயாடவில்லை..
"சன்யாசி ஆனால், தப்பிச்சுடலாம்னு பார்த்தியா?"
கலங்கி போய் நின்றார்,குரு!
"ந்தா...ஆறு மாச ஊட்டு வாடகை பாக்கி ஆறாயிரத்தை குடுத்தா தான் நான் உன்னைய இங்கேர்ந்து போக விடுவேன்"
ஈவு இரக்கமற்ற அந்த House Owner  உத்தரீயத்தினால், குருவானவரின் கழுத்தை சுற்றிக் கொண்டிருக்க...
ஆறாயிரம் கொடுத்து அவரை விடுவித்தான், ஒரு சீடன்..
ஆம்...அந்த அழகிய இளம் பெண்ணை ஆற்றிலிருந்து காப்பாற்றிய அதே சீடன் தான் இவன்!
தழுதழுத்த குரலில் குரு சொன்னார்..
"இன்னும் ஆறு மாதத்தில் செட்டில் செய்து விடுகிறேன்.."
ஆறு மாதமும் கடந்தது...
சிஷ்யன் இப்போது கேட்டான்.
குரு சொன்னார்..
"இன்னுமா நீ சுமந்து கொண்டிருக்கிறாய்?"
........

Wednesday, July 20, 2016

உள்ளதை சொல்லுகிறேன்...அதிலும் நல்லதை சொல்லுகிறேன்!

ஒரு நீண்ட இடைவெளியில் இருக்கிறேன் ...
நான் அதிகம் புதிய சினிமா பார்த்தவன் இல்லை ....
பார்ப்பதற்குரிய சந்தர்ப்பமும் இது வரை கிடையாது..
இப்போது தான் நிறைய புதிய படங்கள் பார்க்கும் சந்தர்ப்பம்..
வாரத்தில் பத்து பதினைந்து புதிய படங்களுக்கு மேல் பார்க்கிறேன்..
ஒன்று கூட மனதில் பதியவில்லை...
ஒரே குழப்பம்...'இந்த படத்தை தான் பார்த்தாச்சே...இல்லை இது வேற..ஊகூம்...அது தானே இது...' போன்ற குழப்பங்கள்...
ஒரே பார்முலா....ஒரே அடிதடி.....காமெடி போய் ஒவ்வொரு ப்ரேமிலும் காம நெடியாய்...
வயலன்ஸே சர்வ வியாபியாய் ...
கமர்ஷியல்....வசூல் என்பதே ப்ரதானமாய்...
இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்கு நம் நாட்டில் அறுபது விழுக்காடுகளுக்கு மேல் இளைஞர் தான் இருக்கிறார்கள்...இருக்கப் போகிறார்கள்...அந்த இளைஞர்களுக்கு Mass Visual Media என்கிற மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் சமுதாய உணர்வு என்பது துளிக்கூட இல்லாமல், அவர்களால் வசூல்  என்பதை மட்டுமே தாரகமாக கொண்டு எடுக்கப் படும் இத்தகைய மசாலா படங்கள் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறதோ?
     Mass க்கு பிடித்ததைத் தான் நாங்கள் கொடுக்கிறோம், என்கிறார்கள், அவர்கள்.
    அவர்கள் கொடுத்ததினால் தான் எங்களுக்கு பிடிக்கிறது என்கிறார்கள், இவர்கள்.
    குற்றவாளிகளை விட, குற்றங்களை நியாயப்படுத்துபவர்கள் தான் நாட்டை கெடுக்கிறார்கள் கொஞ்சம் அதிகமாகவே!
    எப்படி ஐயா, சாதாரணமாக ஒரு வீட்டை கட்டும்போது,செங்கல் வைத்து சுவர் எழுப்பும் வேலையை எலக்ட்ரீஷியனும், கதவு, ஜன்னல் போன்ற தச்சு வேலைகளை செய்ய பிளம்பரும் முன் வந்தால் ஏற்றுக் கொள்ள முடியாத நம்மால், கவர்ச்சி,காமெடி,Fight,Romance என்று சகலத்தையும் ஒரு ...ஒரே ஒரு ஹீரோ எடுத்துக் கொள்ளும் போது,எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது?
    ஏதோ எனக்கு தோன்றியதை சொல்லி விட்டேன்...
    ஒரு வழியாய் மனதிலிருந்த பாறாங்கல்லை மெள்ள மெள்ள நகர்த்தியாகி விட்டது..
    அப்பாடா!
......

Thursday, July 14, 2016

சுய விமர்சனம்!

இதற்காகத் தானா ஆசைபட்டாய் இராம மூர்த்தி?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
. கொஞ்ச நாள் யோகா கற்றுக்கொண்டேன்....ஹட யோகி என்று பெயர் வாங்க ஆசை..Preliminaryஐ     கூட தாண்டவில்லை! Practice விட்டு இரண்டு மாமாங்கம் ஆயிற்று!
. உலகமே திரும்பி பார்க்குமாறு ஒரு சிறுகதை...ஒரே ஒரு சிறுகதை ..ஒரு சிறுகதை தான், எழுத ஆசைபட்டேன்...முடியவில்லை!
. பெயருக்குப் பின்னால், அரை டசன் Post Graduate போட்டுக் கொள்ள ஆசைபட்டேன்...கால் டசன் தான் முடிந்தது!
. Flute ல் ரவிச்சந்திரிகா என்னும் ராகத்தை ராகம் தானம் பல்லவியாக ஒரு மணி நேரம் ஸோலோவாக கொடுக்க முயற்சி செய்தேன்...கமகம் சுத்தமாக வரவில்லை...கல்யாண வசந்தம் வர்ணத்தோடு காலாவதி ஆயிற்று,அது!
. வெண்பா எழுத ஆசைபட்டேன்..சீர்கள் இல்லாத தொடையை தட்டிக் கொண்டு, கொக்கரித்துக் கொண்டிருக்கிறது  தளை, இன்னமும்!
. Dabmash ம் பண்ணினேன்...ஊகூம்!
. காமெடி try பண்ணியதில்   அழுகை வந்தது.
. அரிய பெரிய தத்துவங்களை எளிய இன்னிசை தமிழில் கீர்த்தனைகள் எழுதி உத்தம வாக்கேயனாக ஆசை...அப்படியா என்று கெக்கலித்தது உள்ளம்!
. Strategic Management ல் சிகரம் தொட ஆசை. கை வசம் ஒரு டிப்ளமா கூட இல்லை!
. காளிதாசனின் சாகுந்தலத்தை சர்க்கம் சர்க்கமாக அனுபவிக்க ஆசை..ஆனால், வடமொழியில் ஒரு அட்சரம் கூட தெரியாது!
. அண்டா நிறைய ஆசை இருக்கிறது...ஸ்வாசத்திற்கு அடுத்ததாய் ஆர்வமும்  இருக்கிறது...
கற்றுக் கொண்டே இருப்பேன், காலம் பூராவும்!
இப்போது, Caricature Drawing ல் அடியேன்!
..............


Friday, July 8, 2016

மகாமகம் 2016

கும்பகோணம் மகாமகம்....
---------------------------
கும்ப கோணம் மகா மகத்திற்கு, திருச்சி மலைக் கோட்டை தெற்கு வீதி ஜகதீச சாஸ்திரிகளின் பார்யா பட்டம்மாள், வலங்கை மான் பக்கத்தில் மாத்தூர் என்ற கிராமத்திலிருந்து அம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் சுவாமி நாதன், அவர்களது தங்கை கல்யாணி, வந்திருக்கிறார்கள்.....
கல்யாணிக்கு கல்யாணம் ஆகி விளையாட்டு போல, இரண்டு வருடங்கள் ஆகி விட்டது...குழந்தை பாக்கியம்.... ஊகூம்....
குளக்கரையில், சாஸ்திரிகள் சப்த கன்னியருக்கு ஏதோ பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்...
அவர் முன் ஏழு கும்பம், அரிசி, பருப்பு,வாழைக்காய், உருண்டை வெல்லம்..என்று நைவேத்தியத்திற்கு 
உரிய பொருட்கள்...பெரிய பெரிய தலை வாழை இலைகளில் வைக்கப்பட்டு...
"நல்லா வேண்டிக்குங்கோ...இந்த குழந்தைக்கு புத்ர பாக்யம் உண்டாகும்"
சாஸ்திரிகள் சொல்ல, மூவரும் மனமுருகி வேண்டிக் கொள்ள, சாஸ்திரிகள் அவர்கள் முகங்களில் கும்பத்திலிருந்து ஜலத்தை, மாவிலையால் தெளிக்க....
......................................
(ஐம்பத்தொம்பது வருடங்கள் கழித்து, மறுபடியும் ஒரு மகாமகம் இந்த 2016 ல்)

"அம்மா...அம்மா..."
"யாரு?"
"ஶ்ரீதர்"
"ஶ்ரீதரா....இப்பத்தான் அம்மா சொல்லிண்டிருந்தா, சினிமா மாதிரி டக்னு வந்து நிக்கறே..இதென்ன கையில்?" - அண்ணா.
"கும்ப கோணம் மாமாங்கம் போயிருந்தேன்...அங்கேர்ந்து தீர்த்தம், கொண்டு வந்திருக்கேன்..கார்த்தால குளிக்கும் போது,ப்ரோக்ஷணம் பண்ணிக்கோங்கோ!"
அம்மா கண்களில் திடீரென கண்ணீர்...
"இந்த மாதிரி ஒரு மாமாங்கம் போது தான் நான், அம்பி மாமா,பட்டுப் பெரியம்மா மூணு பேரும்
அங்கே சப்த கன்னியருக்கு ஏதோ பரிகாரம் செய்ய...."
அம்மா சொல்ல சொல்ல முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்!