Sunday, May 29, 2011

தமிழ் மண்ணே வணக்கம்!!!

சமீபத்தில் எங்கள் காலனியில் செக்ரடரி சம்பூர்ணம் ஸார் பையன் கல்யாணம்.அவர் ஹைஸ்கூல் ஹெச்.எம். ஆக இருந்து இளைப்பாறுகிறவர். அவருக்கு கொஞ்சம் தமிழும் பிடிக்கும்.ஆகவே மொய் கவரில் ஒரு வாழ்த்துப் பா வையும் இணைத்து வைத்தேன்.பிடித்தவர்களுக்கு பா இணைப்பது நம் பழக்கம். கல்யாணம் முடிந்து நானும்,திருமதியும் அலுவலகம் சென்று விட்டோம். மொய்க் கவரைப் பிரிக்கும் போது அக்கவிதை அவர் கண்ணில் பட, அதை அப்படியே மைக்கில் படித்தார்.. நல்ல வரவேற்பாம்..அனைவரும் சிரக்கம்பம்,கரக்கம்பம் செய்தனராம்.அதை அவரே சொல்ல, எனக்குப் பெருமை..எனக்கென்ன பெருமை? எம் தமிழ்த் தாய்க்கல்லவோ அப்பெருமை?


பூரணமாய் வாழும் நம் சம்பூர்ணம் அருமைந்தர்
வாரணமாயிரம் சூழ வலம் வந்து,காதல் மனைவி
பொற்கரம் பற்றி கடிமணம் புரிந்த நன்னாளில்,
அற்புதமாய் வாழ்வீரென,வாழ்த்துகிறேன்,அன்புடனே!

Thursday, May 26, 2011

ரத்த தானம்..

எனக்கு ஒரு ஆஃபீஸர்.. நான் எந்த ஜோக்..அது எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் விழுந்து,விழுந்து சிரிப்பார்..என்னிடம் வேலை வாங்கணுமே..அது போல், நானும், அவர் சொல்லும் ஜோக்..(ஜோக்கா அது!) விழுந்து..விழுந்து சிரிப்பேன்..காரணம்..என் லீவை அவர் ஸேங்ஷன் பண்ணனுமே!
இப்படியாப்பட்ட அந்த ஆஃபீஸருக்கு ஒரு நெருக்கடி..அவ்வளவு ஃப்ரெண்ட்லியாய் பழகுகிறாரே, நாம் அவருக்கு உதவி செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது..வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப் பெரிய தப்பு அது தான்!
அதுக்கு முன்னால் ஒன்று சொல்ல வேண்டும்..அதுவும் என்னைப் பற்றி..
நான் ரொம்ப சங்கோஜி...யாருடனும் ஜாஸ்தி பேச மாட்டேன்..அதுவும் லேடீஸுடன் என்றால்..ரொம்ப ரொம்ப சங்கோஜம்..என் கல்யாணத்துக்கே எந்த லேடி ஸ்டாஃப்யையும் நான் கூப்பிடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
அது சரி..உன் சுய புராணம் இங்கு எதற்கு என்கிறீர்களா..அது இங்கு தேவை என்பதால் தான் ஸ்வாமி இவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது..
ஆங்..எதில விட்டேன்..ஆம்..எனக்கு லேடீஸ் என்றாலே அலர்ஜி! ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்தே!
நான் ஸ்கூலுக்குப் போன காலத்தில், ஒரு லேடீஸ் ஹைஸ்கூலைத் தாண்டி போக வேண்டும்.கண்களை மூடிக் கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு போவேன்! காலேஜ்ல அதை விட மோசம்..இரண்டு லேடீஸ் காலேஜ் தாண்டிப் போக வேண்டும்..தலையைக் குனிந்து, தலையை சாய்த்துக் கொண்டே செல்வேன்..இதனால் பாதி நாட்கள் கழுத்து வலி!
குப்புற படுத்துக் கொண்டு கழுத்து முச்சூடும் ஐயொடக்ஸ் தடவிக் கொண்டு கவிழ்ந்து கிடப்பேன்!
சரி..சரி..விஷயத்துக்கு வருகிறேன்..
நம்ம ஆபீஸருக்கு என்ன பிரச்னைன்னா..அவருடைய அப்பா ரொம்ப சீரியஸா இருக்கார்.அவருக்கு உடனடியா ரத்தம் தேவை..யார்..யாரிடமோ ஃபோன் பண்ணிக்கிட்டு இருந்தார் நம்ம ஆஃபீஸர்!
எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை..ரத்த தானம் செய்யணும்னு..இதை நான் ஏன் நமக்கு கிடைச்ச வாய்ப்பா எடுத்துக்க கூடாதுன்னு எனக்குத் தோணிச்சு..உடனே அவர்ட்ட சொன்னேன்..
அவருக்கு ஆச்சர்யமான ஆச்ச்ர்யம்!!.
‘ வூட்ல சொன்னீங்களா, ராம மூர்த்தி’
’ என் வொய்ஃபே ப்ளட் டோனர் தான், ஸார்’
‘ இருந்தாலும் ஒரு வார்த்தை கேட்டிடுங்க..’
கேட்டேன்..பதில் ஓகே!
எனக்கு ரொம்பவும் பெரிய சாதனை செய்தது போல இருந்தது, ரத்த தானம் செய்தது!ஆஃபீஸர் ஆஃபர் பண்ணின ஹார்லிக்ஸ் பாட்டிலை வேண்டாம் என்றேன்..டீ..காஃபி.. வேண்டாம்..மஸால் வடை வேண்டாம்..ரொம்பவும் பைத்தியக் காரத்தனம் செய்யக் கூடாதென்று, ஆஃபீஸில் கொடுத்த ஒரு நாள் ஸ்பெஷல் காஷுவல் லீவ் மட்டும் எடுத்துக் கொண்டேன்..!!
லீவை நன்றாய் என்ஜாய் பண்ணி விட்டு, மறு நாள் ஆஃபீஸ் சென்றால்..ஆஃபீஸரைச் சுற்றி பத்து பேர்..எனக்கோ கலக்கம்..அவர் அப்பா எப்படி இருக்கிறார் என்று..கவலை இல்லை எல்லாரும் சிரித்து பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்..
“ ஸார்..அப்பா எப்படி இருக்கிறார்..”
“ வாங்க ராம மூர்த்தி, சரியான சமயத்தில் தான் வந்திருக்கீங்க..கிழிஞ்ச நார் போல பேச்சு..மூச்சில்லாம படுத்துக் கிடந்தவரு, நீங்க ரத்தம் கொட்டுத்துட்டுப் போன ஆறே மணி நேரத்துல...”
“ ஆறு மணி நேரத்துல?”
“ டபால்னு படுக்கையை விட்டு எழுந்தாரு..உட்கார்ந்து கொண்டு கழுத்தை முன்னூற்று அறுபது டிகிரி திருப்பி, அங்க இருக்கிற நர்சுங்கள எல்லாம் ஸைட் அடிக்கிறாரு..எனக்கானா
ஆச்சர்யமான ஆச்சர்யம்..அப்புறந்தான் புரிஞ்சது..உள்ள போனது என்ன? நம்ம ராமமூர்த்தியோட ரத்தம் ஆச்சே..என்னமா வேலை செய்யுது அது?”
எல்லாரும் கொல்லெனச் சிரிக்க..
ஒரு கணம்..ஒரே கணம் தான்..
என்னுள் ஒரு வைராக்யம் எழுந்தது..
..இனி மேல் ஒரு சொட்டு ரத்தம் கூட யாருக்கும் தரப் போறதில்ல...
கொசுக்களத் தவிர!!

Wednesday, May 18, 2011

நவீன ஆத்திச்சூடி!!


அரம் செய்ய விரும்பு!
(Unemployed மகனைப் பார்த்து Carpentar ஆன அவன் அப்பன் சொன்னது இது.அதாவது குலக் கல்வி பற்றிய நீதி. குலத் தொழில் ஒன்றை நீ கற்றுக் கொள்! குடைச்சல் இனி இல்லை என்று ஒத்துக் கொள்!!)
ஆறுவது நீதி!
(ரொம்பவும் Heat ஆன டாபிக் ஆக இருந்தால், அதற்கு ஒரு கமிஷன் அமைத்து விடு! தன்னைப் போல் ஆறி விடும்)
இயல்வது கறவீர்!
(பழம் தின்று கொட்டைப் போட்ட அப்பா, புதிதாய் அரசு வேலையில் சேர்ந்த பையனிடம் சொன்ன அட்வைஸ் இது)
ஈவதை விலக்கேல்!
(தேர்தல் வாக்குறுதி இலவசமாய் ஏதாவது கொடுத்தால், லஜ்ஜைப் பட்டுக் கொண்டு வேண்டாம் என்று சொல்லாதே)
உடைவதை விரும்பு!
(ஏதாவது கட்சி உடைந்தால் அதில் நீ குளிர் காய் என்று ஒரு அரசியல் வாதி சொன்ன அட்வைஸ்)
ஊக்க ‘மது’ கை விடேல்!
(புதிதாய் டாஸ்மாக் கடை திறப்பு விழாவில வருவாய்த் துறை அமைச்சர் சொன்னது)
‘என் எழுத்து’ இகழேல்!
(எவனாவது என் எழுத்தைக் கமெண்ட் அடிச்சா கை, கால் இருக்காது என்றானாம் ஒரு இலக்கிய வாதி!இது எழுத்தாளர்களுக்கான அட்வைஸ்)
ஏற்பது மகிழ்ச்சி!
(வேலை, வெட்டி இல்லாமல் யாராமல் புகழ்ந்தால், அது அண்டப் புளுகு,ஆகாசப் புளுகு என்றாலும் அன்போடு ஏற்றுக் கொள்)
ஐயம் இடாமல் உண்!
(விலை வாசி விண்ணை முட்டும் இந்நாளில், விருந்துக்கென்று யாரையாவது கூப்பிட்டு, வீட்டில்,வயிற்றெறிச்சல் கிளப்பி, உள் நாட்டுக் குழப்பம் உண்டாக்காதே!)
ஒப்புறவு கொள்வீர்!
(ஒப்புக்கு உறவு கொள்! காலை வாரி விடும் என்றால், காங்கிரஸே ஆனாலும் கழட்டி விடு)
ஓதுவது தமிழில்!
( நம் தமிழ் நாட்டில் வெஜ், நான் வெஜ் அத்தனை கடவுள்களுக்கும் தமிழில் அர்ச்சனை செய்)
ஓளடதம் கொள்ளேல்!
(காசு கொடுத்து மருந்து வாங்கி, குப்பையில் கொட்டவும்.அப்போது தான், மருந்துக் கடைக் காரனும் பிழைப்பான்.. நாமும் பிழைப்போம்!!)

பின் குறிப்பு:
இன்னும் எத்தனை நாளுக்குத் தான் ஆத்திச் சூடி என்றால் ஒவ்வை படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது? ஒரு CHNAGE க்குத் தான் நம்ம ஜீனா லோலா பிரிகேடா படம் !!!!...

Wednesday, May 11, 2011

உங்க அப்பன் வீட்டு ரோடா?


அது ஒரு அழகிய மணி மண்டபம். அரியணையில் எமதர்ம ராஜா வீற்றிருக்கிறான். பக்கத்தில் சற்று,தாழ்ந்த ஆசனத்தில் சித்ரகுப்தன், தன் ’லேப்டாப்பில்’ ஏதோ feed பண்ணிக் கொண்டிருக்கிறான்..
“சித்ரகுப்தா, இந்த மாசம் turnover எவ்வளவு?
“ மஹாராஜா மார்ச் டார்ஜெட்டை விட 18% அதிகமாகவே பண்ணியிருக்கிறோம். நமது கிங்கரர்கள், முழு முச்சாய் வேலை செய்ததால், இது சாத்தியமாயிற்று, மன்னா..”
“ அவர்களுக்கு நன்றி சொல்வதற்கு, ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணலாமா? “
சித்ர குப்தன் சொல்ல ஆரம்பிப்பதற்குள், வாசலில் ஆரவாரம்..கிங்கரர்கள் கூட்டம்
உள்ளே நுழைய மிகவும் ப்ரயாசைப் பட, வாசலில் நிற்கும் துவார பாலகர்கள் அவர்களை
மிகவும் சிரமப் பட்டு தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“ யாரங்கே, அவர்கள் எல்லாரையும் உள்ளே அனுப்பு”
திமுதிமுவென்று அத்தனை கிங்கரர்களும் உள்ளே நுழைந்தனர்.
“ வாருங்கள்..வந்து அமருங்கள்”
இருகரம் கூப்பி அனவரையும் வரவேற்றான், எமதர்ம ராஜன்.
“ கிங்கரர்களே மிக்க சந்தோஷம்..தங்களின் இடையறா உழைப்பைப் பார்த்து?” என்றவன்,
கட்டளையிட்டான்.
” எல்லாருக்கும் லிம்கா கொண்டு வாருங்கள்”
“இந்த சந்தோஷத்தை நாம் கொண்டாடலாம், என்ன கிங்கரர்களே?”
“ மன்னவா, மன்னிக்க வேண்டும்.. நாங்கள் சந்தோஷமாய் இல்ல..”
“ஏன்?”
“ மன்னவா, பூலோகத்தில் இறப்பு விகிதம் ஜாஸ்தியாகி விட்டது.அதனால், எங்களுக்கும் வேலைப் பளு ஜாஸ்தி..இந்த எருமை மாட்டை வைத்துக் கொண்டு, பாசக் கயிறை வீச முடியவில்லை.இங்கு ரிடையர்டா ஆனவர்களுக்கும் replacement இல்லை..fresh recruitment ம் இல்லை..கேட்டால்,” Recruitment ban" என்கிறீர்கள். வந்து குவிகிறது வேலை. எங்களுக்கும் வயதாகி விட்டது. முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை..”
“ என்ன செய்யலாம், சொல்லுங்கள்?”
அதற்குள் கூல் ட்ரிங்கஸ் வரவே,எமன் அனைவரையும் உபசரித்தான்.
” முதலில் இதை குடித்து விட்டு,பேசலாமே?”
கழனித் தொட்டியில்,எருமை மாடுகள் உறிஞ்சுவது போல், சர்ரென்று சப்தத்துடன் குடித்தார்கள், கிங்கரர்கள்.
“ உங்கள் கோரிக்கை என்னவோ?”
“ நமது சித்ர குப்த பிரபுவிற்கு, லாப்டாப் கொடுத்து, SAP ஐயும் லோடு பண்ணி விட்டீர்கள்.. நாங்கள் இன்னமும் அதே எருமை மாட்டைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியது தானா?”
“ என்ன வேண்டும், சொல்லுங்கள்?” டார்கெட் அச்சீவ் பண்ணியதில் எமன் ரொம்பவுமே
நல்ல மூடில் இருந்தான்.
“ எல்லா இடங்களிலும் டெக்னாலஜி புகுந்து விட்டது. நரர்களின் கடைசி காரியத்திற்குக் கூட, மின்தகனம் வந்து விட்டது. எல்லா நரர்களும் டூ வீலர், ஃபோர் வீலர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூலோக வாழ்க்கையே, எந்திரமயமாகி விட்டது.எங்கும் ஒரே பரபரப்பு.
சீக்கிரம் போகவேண்டும் என்று எல்லாருமே துடித்து....போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சீக்கிரமே ‘வந்து’ விடுகிறார்கள்...”
“ நரர்கள் கொத்து, கொத்தாய் வருகிறார்கள், மன்னா..இன்னமும் இந்த எருமை மாட்டை வைத்துக் கொண்டு எங்களால் சமாளிக்க முடியவில்லை..அதனால்..”
”அதனால்..என்ன வேண்டும் கேள், கிங்கரா?”
“இன்னோவா”
“இன்னோவாவா?”
”ஆம், மன்னவா ...அது மட்டுமல்ல..எங்களுக்கு ஆளுக்கு இரண்டு உதவியாளர்கள் வேண்டும்...”
எமதர்ம ராஜன் ஒரு நிமிடம் யோசித்தான்..பிறகு சொன்னான்.
“ கிங்கரர்களே... நம்மிடம் பர்மணென்ட் போஸ்டிங்குக்கு சாங்ஷன் இல்லை..
ஆனால் ஒன்று செய்கிறேன்..அப்ரண்டிஸ்களை ரெக்ரூட் செய்வோம்..மூன்று வருடங்கள்
consolidated pay தான் அவர்களுக்கு...அனுப்பி விடலாம்...மூன்று வருடங்கள் முடிந்த பிறகு, அவர்களை அனுப்பி விட்டு, புதிதாய் அப்ரண்டிஸ்களை எடுக்கலாம்..சரிதானே”
“ சரி தான்...”
”எமதர்மன் வாழ்க”
“எமத்ர்மன் வாழ்க”
கூச்சல் அடங்க முழுதாய் அஞ்சு நிமிடம் ஆயிற்று.குதூகலத்துடன் கலைந்து சென்றனர், கிங்கரர்கள்.
இந்த மாதிரியாகத் தானே நான் கற்பனை செய்து கொண்டு நடக்கும் போது, சர்ரென்று,ஒரு கார் என்னை உரச......
பயத்தில்...ஆத்திரத்தில் நான்” உங்க..........” என்று திட்ட ஆரம்பிப்பதற்குள்,கார் போய் விட, அதன் பின் கண்ணாடியில்.....
“YES, THIS IS MY FATHER'S ROAD!” - என்று எழுதி இருந்தது!!!