Sunday, May 19, 2013

காதல் வெண்பாக்கள் (3)

*
கூர் விழிப் பார்வையிலே கூழாக்கி, என்னை
ஊர் சிரிக்க வைத்து விடாதடி, பெண்ணே!
கார் மேகம் கூடி ககன நீர் விழுந்தது போல்,
வார் அறுந்த பையாய் வீழ்த்தி விட்டாயென்னை!
**
உமிழ் நீரில் உறைகின்ற கற்கண்டே! உந்தன் 
குமிழ் சிரிப்பைக் காணும், தகை சால் 
சான்றோர்க்கும், தமிழ் இனிதா என்ற சந்தேகம்,
தன்னாலே வந்து விடும்!
***
இழப்பதற்கு இல்லா இந்நிலையில் நானும்,
இழந்து விட்டேன் என்னை உன்னிடமே, பஞ்சம்
பிழைப்பதற்கு வந்த அசலூர் காரன் போல்,விழியால்
பிழிந்து எடுத்து விட்டாய் என்னை!