Wednesday, September 25, 2013

கடவுள் மனிதனாய் பிறக்க வேண்டும்........!!!!!!!!!!




(முன் குறிப்பு : கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞன், தன்னை GOVT.COMPANY STAFF ஆக குறுக்கிக் கொண்டு, GOVT.
AUDITOR களிடம் என்ன பாடு படுவான் என்கிற கற்பனையின் விளைவே இக்கவிதை..இது யார் மனதையாவது புண் படுத்தினால்,அவர்கள் ஏதாவது ஒரு பெட்டிக் கடைக்கு சென்று, என் பெயர் சொல்லி, கையில் உள்ள காசை கொடுத்து விட்டு சிகரெட் வாங்கி, அந்த புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றவும்!)
கடவுள் GOVT. COMPANY யில் பிறக்க வேண்டும்...
அவன் REPLY எழுதி, கை ஒடிந்து சாக வேண்டும்...
QUERY என்றால், என்னவென்று உணர வேண்டும்...
IR * என்றால் அலறிக் கொண்டு ஓட வேண்டும்...
எத்தனை QUERY கொடுத்தான்....
அத்தனைக்கும் REPLY செய்தான்...
அத்தனை REPLY யிலும் REJOINDER
எனும் பொடி வைத்தான்......
படுத்துவான்...
படுத்துவான்...
படுத்திக் கொண்டே தான் இருப்பான்...
பாவி அவன் ஆடிட்டரை படைக்காமல்
விட்டிருப்பான்.......
(மறுபடியும் பல்லவி)
கடவுள் GOVT. COMPANY யில் பிறக்க வேண்டும்...
அவன் REPLY எழுதி, கை ஒடிந்து சாக வேண்டும்...
----
* INSPECTION REPORT
(பின் குறிப்பு: என்னுடைய ‘சேட்டை’ மன்னிக்கப் படுவதாக!)

Sunday, September 22, 2013

ஆயிரமாயிரமாய் துப்பும் மெஷின்.....(AATM)


அவர்களின் பெண் அவர்கள் நினைத்தது மாதிரியே, கம்ப்யூட்டர் சயின்ஸ் இஞ்ஜினீயர் ஆகி விட்டாள்..ஆகி கொஞ்ச நாட்களிலேயே, அவர்கள் விரும்பிய அந்த கம்பெனியில் வேலையும்  கிடைத்து விட்டது..அவர்கள் எண்ணம் போல கை நிறைய சம்பளம்!
   இனி என்ன, அவளுடைய ஜாதகக் கட்டை தூக்க வேண்டியது தான்!
  வந்த அத்தனை வரன்களை ஜோஸியரிடம் பார்த்ததில் இரண்டு தான் பொருத்தமாய் இருந்தது..
  முதல் வரன் இவளை மாதிரியே ஐ.டி.கம்பெனியில் வேலை ..வயசு இவளை விட நான்கு மாதம் தான் பெரியவன்.......அடுத்த ஐந்து மாதங்களில் யு.எஸ். பறக்கப் போகிறவன்..ஒரே பையன் ..அப்பா ரிட்டயர்ட் கவர்ன்மெண்ட் ஆஃபிசர்..அம்மா ரிடய்ர்ட் பாங்க் ஆஃபீசர்..லக்சுரி ப்ளாட்..கார்..என்று அவர்கள் இருக்க, பையன் பெங்களூரில்..
    அடுத்த வரன் சற்று நெருடல்!
    அதை அவளிடம் காண்பிக்க வேண்டாம் என்று தான் அவர்கள் நினைத்தார்கள்..இருந்தாலும் இதை நாம் எடுத்துக் கொண்டது போல அவளும் வேடிக்கையாக எடுத்துக் கொள்வாள் என்று அந்த வரனைப் பற்றியும் சொன்னார்கள்...
    ரொம்ப அசுவாரசியமாய் தான் அவளும் கேட்டுக் கொண்டிருந்தாள்..
    “என்னம்மா சொல்றே?..எப்படி எல்லாம் மனுஷனுக்கு ஆசையைப் பாரேன்..ஏதோ அந்த காலத்துல தான் இப்படி எல்லாம் நடந்தது என்றால், இப்பவும் அப்படியே எதிர்பார்க்கறாங்களே..”
    “ஏங்க, நம்ம ரெண்டு பேருக்குக் கூட வித்யாசம் ஒரு  வருஷம் தானே”
    “ஆமாம்...அதுக்கே, எங்க அப்பா குதிச்சார்....”
    ” ஒரு ஒத்துமை பார்த்தியா. நம்ம கல்யாணம் முடிஞ்சதும், உங்க அப்பா அந்த காஞ்சிபுரம் வீடு வாங்கினார்.. நாமளும், அதே மாதிரி, நம்ம பொண்ணு கல்யாணம் முடிஞ்சப்புறம் மைலாப்பூர்ல FLAT வாங்கப் போறோம்..”
    “ அப்ப EMI க்கு பென்ஷனா?”
    “ நீ வேற...புதுசா ஒரு ASSIGNMENT கிடைச்சிருக்கு..இவ கல்யாணத்திற்கு பிறகு ஜாய்ன் பண்ணலாம்னு இருக்கேன்...அதுல வர்ர பணம் EMI க்கு அட்ஜஸ்ட் ஆயிடும்..”
     “ நாமளும் வெளில..வாசல்ல போய் நாளாச்சு..இவ கலியாணம் முடிஞ்சதும் அப்படியே ஸ்விஸ் போலாம்னு..”
    “ என்ன, செகண்ட் இன்னிங்க்ஸா..”
    “ அது சரி.. நாம பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கோம்...உன் பொண்ணு கல்யாணத்தைப் பார்ப்போம், முதல்ல..என்னம்மா சொல்றே?
அந்த ஐ.டி.கம்பெனி வரனைப் பார்ப்போமா?”
“வேண்டாம்பா”
“என்னம்மா இது..கல்யாணமே வேண்டாமா? என்ன சொல்றே, நீ?”
“அப்பா..அந்த ரெண்டாவது வரன்..”
“என்னது” - இருவரும் அதிர்ந்து போய் கேட்டனர்..
சமாளித்துக் கொண்டு அவர் சொன்னார்:
“அம்மா, வரனுக்கு வயசு ஐம்பத்தைந்து”
“தெரியும்”
“VRS வாங்கினவர்”
“சரி”
“WIDOWER"
"தெரியும்"
“சின்ன..சின்னதாஇரண்டு பெண் குழந்தைகள்....”
“அப்புறம்?”
“கல்யாணம் ஆனதும் பெண் வேலைக்குப் போகக் கூடாது”
“ரொம்ப சரி”
” நீ அந்த வீட்டுக்கு ஆயாவா போகப் போறே”
“தெரியும்”
“என்னம்மா ...உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா..”
“இல்லப்பா..தெளிஞ்சிருக்கு... நீங்க ரெண்டு பேருமே OFFICE GOERS.ஒரு சராசரி குழந்தைக்கு வேண்டிய அன்பு எனக்கு கிடைக்கல...மாறா, ரேஸ் குதிரைக்கு செய்யறாப்பல தான் எனக்கு எல்லாம் செஞ்சீங்க..அந்த ரேஸ்குதிரையும் நீங்க நினைக்கற மாதிரி,ரேஸுக்கு ரெடியாயிடுச்சு..இன்னொரு குதிரையும் அதோட கட்டி விட்டா அதுங்க மாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கும் என்று தான் உங்கள் நினைப்பு..ஆசை..ஆனா, எனக்கு கிடைக்காத.. நான் இழந்த  அந்த அன்பை, அந்த பாசத்தை அந்த குழந்தைகளுக்கு நான் கொடுக்கலாம்னு இருக்கேன்.....வாய்க்கு ருசியா அவருக்கு சமைத்துப் போட போகிறேன்...அவருக்கு மனைவியா பணிவிடை செய்யப் போகிறேன்...மொத்தத்திலே ஒரு மனுஷியா வாழலாம்னு ஆசைப் படறேன்..
BREAK FAST ஐ உட்கார்ந்து கொண்டு கூட சாப்பிட முடியாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்பா..என்னையும் ஒங்கள மாதிரி’ஆயிரமாயிரமாய் துப்புற மெஷினா ஆக்காதீங்க ப்ளீஸ்”
    அவள் சொல்லிக் கொண்டே போக, விக்கித்து நின்றனர், அந்த ரிடையர்ட் ஐ.ஐ.டி. ப்ரபொசரும்....அவரின் மனைவியான அந்த ரிடய்ர்ட் பப்ளிக் செக்டார் ஜெனரல் மேனேஜரும்!

Monday, September 2, 2013

வீடு வரை போலீஸ்!

”என்னங்க... நம்ம வூட்டுக்கு போலீஸ் வந்துச்சாம்” “எதுக்கு?..எப்படி உனக்குத் தெரியும்?” கேள்விக் கணைகளை அடுக்கினேன்.. வீட்டுக்குள் வரும்போதே தெரு வாசலில் நாராயண ராவ் துக்கம் விசாரிப்பது போல் இதை கேட்டு விட்டார்.. அதாவது பரவாயில்ல..”உங்கவூட்டுக்கு போலிஸ் காரங்க வந்தா சொல்லுங்க நானும் பார்க்கணும்?” என்று ஒரு வேண்டு கோள் வேற! அது சரி..கமலாவிற்கு எப்படி இது தெரியும்? அவளும் என்னை மாதிரி OFFICE GOER. ”பக்கத்து வீட்டு பரிமளா சொல்லிச்சு” ஐயோ...என்று வாய் வந்த வார்த்தைகளை கஷ்டப் பட்டு அடக்கி கொண்டேன். பரிமளா என் எழுத்துக்களின் ரசிகை..அவளைப் பார்ப்பதற்கு முன், மூணு இஞ்ச் பவுடரை நான் கொட்டிக் கொள்வதும், இரண்டு அவுன்ஸ் செண்ட் பாட்டிலை விரயம் செய்வதும், முன் வழுக்கையை மறைக்க பின்னால் உள்ள மூணு முடிகளை முன்னுக்கு கொண்டு வர நான் பாடு படுவதும்..... எத்தனையோ ‘.....தும்,........ தும்’ ”பரிமளா என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? அவள் முன் போலீஸ் என் கைகளில் விலங்கு மாட்டிக் கொண்டு போவதென்றால்.. சேச்சே முகத்தை கர்ச்சீப்பினால் மூடிக் கொண்டு போக வேண்டியது தான்..” ஹிண்டுவில் அப்படித் தானே கிரிமினல்ஸ் முகத்தை மூடிக்கிறாங்க.. ” என்னங்க.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீங்க பேசாம இருக்கீங்க?” நிகழ்வுலகத்திற்கு சட்டென வந்தேன். ”ஆமாம்..என்ன கேட்டே?” “என்ன தப்பு பண்ணினீங்க..லஞ்சம் வாங்கினீங்களா?..அது சரி இந்த மூஞ்சிக்கு எவன் லஞ்சம் குடுப்பான்? என்ன பண்ணினீங்க நீங்களே சொல்லுங்க?” “அதான் .. நீயே சொல்லிட்டியே..எனக்கு எவன் லஞ்சம் கொடுப்பான்?” “அப்ப வேற என்ன பண்ணினீங்க?” “ட்ராஃபிக்ல சிக்னலை மதிக்காம போனீங்களா?” “நான் ஆபீஸ் போற பாதையில சிக்னலே இல்ல..” “பின்ன...வேற என்ன தப்பு பண்ணினீங்க?” ”கமலா..இன்னுமா நீ என்னை புரிஞ்சிக்கலை.. தப்பு,தண்டாக்கலாம் போறதுக்கு ரொம்ப தைர்யம் வேணும்..எனக்கு அது கிடையாதுங்கிறது தான் உனக்குத் தெரியுமே?” ” அதெல்லாம் சரி தான்.. எதுக்கு போலீஸ் உங்களைத் தேடணும்?” “அது தான் எனக்கும் தெரியலையே கமலா” டாலருடன் நடக்கும் போட்டியில் தேய்ந்து போன ரூபாய் போன்று என் குரலும் தேய்ந்து போனது..... வாசலில் சத்தம்..”சார்..சார்” கதவைத் திறந்தேன்...கவுண்டமணி ஜாடையில் முகமும், செந்தில் தொப்பையாடும் ஒரு போலீஸ் காரர்! சொரேர் என்று வயிற்றுக்குள் கமலா காலையில் செய்த எலுமிச்சம்பழ ரசம் ஹைட்ரோக்ளோரிக் ஆஸிட் ஆக சுரக்க.. ..இருந்தாலும் சமாளித்துக் கொண்டு உளறினேன்.. ”வாங்க சார் வாங்க ...கமலா இங்க வந்து யார் வந்திருக்காங்கன்னு பாரு?’ “டீ சாப்டறீங்களா..இல்ல காஃபி...” அவர் எனக்கு ஏதாவது தண்டனை கொடுப்பதற்கு முன் நாம அவருக்கு ஏதாவது கொடுத்து விட வேண்டும் என்கிற அவசரம் எனக்கு! “அதெல்லாம் வாணாமுங்க..” சட்டென்று அவர் கையைப் பார்த்தேன்..கைகளில் விலங்கு ஒன்றும் இல்லை.. அப்பத் தான் எனக்கு உயிரே வந்தது. ஒரு நிமிடம் மெளனம்.. அதை அந்த போலீஸ் காரரே உடைத்தார்.. “ நீங்க நல்லா கதை எளுதுவீங்களாமே நம்ம ரைட்டர் ரகு தான் சொன்னாரு..எங்க ரிக்ரியேஷன் க்ளப்புக்கு ஒரு நல்ல நாடகமா எளுதித் தாங்க..ரகு தான் இங்க அனுப்பிச்சாரு” வந்தவர் போய் விட்டார்! ஆனால், சிரியாவை அமெரிக்கா ’லபக்’காகி விடுமோ என்கிற ஆவலில் வாசல் வரை வந்து ஒட்டு கேட்ட நாராயண ராவின் முகம் தான் பேஸ்து அடித்தது போல ஆகி விட்டது!