Wednesday, November 11, 2009

இதோ எனது முதல் கவிதை ..


பட்டத்தை பறக்க விட்டு,
பரதேசிப் போல்
முடி வளர்த்து..
பக்கவாட்டில் கிருதாவை..
பாங்குடனே
வளர்த்து விட்டு,
இஞ்சி தின்ற
குரங்கு போல்
எப்போதும்
முகம் தொங்கி...
நண்பர்கள்
புடை சூழ..
கடை வீதி
நடந்து சென்றால்..
ஜவுளிக் கடை
பொம்மை கூட
சட்டென்று
திருப்பிக் கொள்ளும் !!

----- ஃ ----