Monday, November 9, 2009

யார்?

குழலில் ஸ்வரங்களை அப்யசிக்கிறேன் ...
அதற்கு இனிமை கொடுத்தது யார்?
இளஞ்சூட்டில் புளி நீரில் உப்பு தூவுகிறேன் ...
அதற்கு சுவை கொடுத்தது யார்?
விசிறியால் புழுக்கம் மறைய விசிறுகிறேன் ...
அதற்கு குளுமை கொடுத்தது யார்?
மேலும் கீழும் கோடுகள் போடுகிறேன் ...
அதற்கு உருவம் கொடுத்தது யார்?

1 comment:

ரிஷபன் said...

HE is "RR" who gives taste to words!