Wednesday, November 11, 2009

பிரிவு..


ஆபிசில், இரண்டாயிரத்து மூன்றாம் வாக்கில், விருப்ப
ஓய்வு பெற்ற சக பெண் ஊழியர் ஒருவரைப் பாராட்டி
வரைந்த மடல் இது .......

ஏணிக்குப் படி போல
போனுக்கு குரல் போல
கோனுக்குள் ஐஸ் போல
லோனுக்குள் நீ இருந்தாய் !
பி.எப். லோனுக்குள்
நீ இருந்தாய் !!

கடன் வேண்டும் - அதுவும்
உடன் வேண்டும் - என
'சடனா'க வந்து
நச்சரிக்கும் நண்பர் பலர் !

அம்மா அம்மாவென்று
அலறிடுமே ஒரு கும்பல்..
அத்தனையும் சமாளிக்கும்
வித்தகத்தை அறிந்திடுவார் !!

அலை அலையாய் அப்ளிகேஷன்
மலை போல குவிந்தாலும்,
சிலை போல மலைக்காமல்,
சிற்றெறும்பாய் உழைத்திடுவார் !

கடன் வழங்கும் கலங்கரை
விளக்கமாய் திகழ்ந்திடுவார்
உடனிருந்து உழைப்போரை..
உறவினராய் மதித்திடுவார் !!

விருப்ப ஓய்வு பெறும் அவரை,
விருப்பமின்றி அனுப்பி வைப்போம்
பல்லாண்டு,பல்லாண்டு,
பல்லாண்டு வாழ்ந்திடவே..
மன்றாடி இறைவன் தன்
தாளினையேப் பணிந்திடுவோம்

--- 0 ---

1 comment:

ரிஷபன் said...

'சடனா'க வந்து
நச்சரிக்கும் நண்பர் பலர்
வார்த்தை விளையாட்டு ஓஹோ