Wednesday, November 11, 2009

மேதைகளும்....பேதைகளும்....





ஒரு சோம்பலான ஞாயிற்றுக்கிழமை. பொழுது போகாமல்,
அந்த வாரப் பத்திரிகையைப் பிரித்த அரவிந்தனுக்கு, ஆச்
சர்யம்! குழந்தைக் கலைஞர்களைப் பற்றிப் போட்டிருந்தார்
கள். பேட்டி காணப்பட்ட அந்தப் பிறவி மேதைகளின் மேத
மைக்கும், அவர்கள் பெற்றோர்களின் 'ஹாபி'க்கும் துளிக்
கூட சம்பந்தமில்லை! அப்படியானால் .......
சங்கீத ஞானம் இல்லாத பரம்பரையில் வந்த அரவிந்தன்
என்ற 'பாங்க் க்ளார்க்'கின் செல்ல குட்டி மூன்றாவது வயதி
லேயே ராகம் பாட ஆரம்பித்து விடுவாளா?
அந்த நினைப்பே பரவசப்படுத்தியது அவனை!
'வாவ்..' என்ற சந்தோஷத்துடன் "ஆனந்தி!" என்று அலறினான்.
அவனுக்கு கோபம் வந்தாலும் தாங்காது. சந்தோஷம் வந்தாலும்
தாங்காது.
"என்ன?" என்று சமையல் உள்ளிலிருந்து வந்தாள் ஆனந்தி.
உற்சாகத்துடன் அவன்சொன்னதை இடைமறித்து, "போறுமே!
உங்க பொண்ணு 'லயா' பாடற பாட்டை, நீங்களும், நானும் தான்
கேட்கணும்" என்று 'லயாவில்' ஒரு அழுத்தம் கொடுத்து உள்ளே
சென்று விட்டாள்.
வாஸ்தவத்தில் 'லயா' என்ற பெயர் அவளுக்குப் பிடிக்கவே
இல்லை. ஆசையா 'நியுமராலஜிஸ்'டிடம் கேட்டு 'வர்ஷா'
என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தவளை ஒரேடியாக
அடக்கி விட்டான் அரவிந்தன். "வர்ஷா ஹர்ஷான்னு நர்ஸரி
ரைம் மாதிரி பேரா...!"
"வேண்டாங்க...'ஜெய லக்ஷ்மி' ன்னு பெயர் வச்சு'ஜெயா' ன்னு
கூப்பிடலாங்க. இந்த 'லயா'ங்கற பேர் வேண்டாம். என்னவோ
போல இருக்கு" என்றவளை,
"உனக்கு என்ன தெரியும்? எங்க 'சீனியர் மேனேஜரோட
பொண்ணு பேரு லயா. 'லயா'ன்னா என்னன்னு நினச்சே?
பூமா தேவின்னு அர்த்தம். லயாங்கிறது 'ப்யூர்' 'சான்ஸ்க்ரிட்'
'நேம்' என்றான் பூரிப்புடன்.
'போய்யா, நீயுமாச்சு, உன் பேருமாச்சு' என்று அப்போது
விட்டு விட்டாலும், ஆனந்திக்கு அந்த பெயர் பிடிக்கவே
இல்லை.
கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டான், அரவிந்தன்.
அந்த அலங்கார மேடையில், விஸ்தாரமாக ஒரு ராகத்தைப்
பாடியபடி அவன் பெண்,சென்னையில் பிரபல சங்கீத சபா
ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில், ஜாம்பவான்களெல்லாம்
அதிசயிக்க, அவனைப் பேட்டி கண்டார்கள் பத்திரிகை
நிருபர்கள்.
" உங்கள் பெயர்?"
சொன்னான்.
"செய்யும் தொழில்?"
சொன்னான்.
"லயா" என்பது முன்கூட்டியே தீர்மானம் செய்த பெயரா?"
என்று கேட்டதற்கு 'லயா' வின் பெயர்க் காரணம் சொன்னான்.
"லயாவுக்குத் தங்கை பாப்பா உண்டா?" என்று குறும்புடன் கேட்ட
ஒரு நிருபருக்கு,
"பிறக்கப் போகிறது. 'ஸ்ருதி' என்று பெயர் வைக்கப் போகிறோம்.
அந்தக் குழந்தைக்கும், நன்கு பயிற்சி கொடுத்து, ஸ்ருதி, லயா இருவரும்
சங்கீத உலகின் கண்கள் என்று சங்கீத விமரிசகர்கள் கூறப் போகிறார்
கள். அதுவே சங்கீத தேவதைக்கு, ஏழை, என்னால் முடிந்த சிறு
காணிக்கை என்று உணர்ச்சிவசப்பட்டு பேட்டி கொடுத்த அவன்
வயிற்றில் 'லொட்' டென்று காலைத் தூக்கிப் போட்டாள் லயா!
வேறொரு சமயமாயிருந்தால், அந்தக் காலை வேகமாக வீசி எறிந்தி
ருப்பான்."செல்லக் குட்டி, லயா குட்டி" என்று கொஞ்சிக் கொண்டு,
நச்சு, நச்சென்று முத்தங்களை வாரி, வாரி வழங்கினான், இப்போது.
"ஊ....ம்" என்று செல்ல சிணுங்கலோடு, குப்புற படுத்துக் கொண்டது,
லயா!
அடுத்து வந்த நாட்கள், லயாவுக்குப் போதாத காலம் என்று தான்
சொல்ல வேண்டும்.
'குழந்தை வளர்ப்புக் கலை' புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தான்,
அரவிந்தன். அதிசயமாகப் பார்த்த ஆனந்தியை அதட்டி, 'டயட் டைம் டேபிள்'
போட்டு, குழந்தைக்கு வேளாவேளைக்கு இன்னின்ன ஆகாரம் கொடுக்க
வேண்டும் என்று அறிவுறுத்தினான்.
'சங்கீத பால பாட' கேசட்டுகளை வாங்கி, குழந்தை வீறிட்டு அழும் வரை
'டேப்' போட்டான். "அப்பா ப்ளீஸ் போரடிக்குதப்பா'' என்று கெஞ்சிய
குழந்தை முதுகில் நாலு போடும் போட்டான்!
இளமையான மியூசிக் டீச்சரிடம் குழந்தை சலுகை எடுத்துக் கொண்டு
விடும் என பயந்து, பல்லு போன கிழவர் ஒருத்தரைப் பாட்டு வாத்யாராக
நியமித்தான்.
வாத்தியாரைப் பார்த்ததும் பாட்டு வரவில்லை, லயாவிற்கு. பயம் தான்
வந்தது.
'குழந்தையைச் சிரமப்படுத்தாதீர்கள் சார்" என்று வாய் வரை வந்த வார்த்
தைகளை ரொம்பவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார், அந்த முதியவர்.
எவன், அவருக்குச் சுளையாக மாதம் நூற்றைம்பது ரூபாய் தரப் போகிறான்?
ஆயிற்று இன்றுடன் சரளி வரிசை 'ஓவர்'. பிறகு ஜண்டை வரிசை. அதற்குப்
பிறகு அலங்காரம்...அப்புறம் கீதம்..அலங்கார மேடை...பத்திரிகை நிருபர்கள்..
சந்தோஷத்துடன் ஆபிசிலிருந்து வந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டி
ருந்தது.
'ராக்கம்மா கையைத் தட்டு' என்று ஒரு வாண்டு கீச்சுக் குரலில் பாட, 'பாட்டு
க்ளாஸ்' என்றாலே வேப்பங்காயாய் நினைக்கும், லயா, இடுப்பை அசைத்து,
உடம்பைக் குலுக்கி டான்ஸ் ஆட, சுற்றி நின்ற குழந்தைகள் கும்மி அடித்துக்
கும்மாளம் போட...
தன் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போன நிலையில்...
ஆத்திரத்தில் கையை ஓங்கிய அரவிந்தன் ஒரு நொடி யோசித்தான்.
ஒரு நொடி தான்....
'விளக்கு உள்ளுக்குள் சுயமாக எரிய வேண்டும். அது சுடர் விட்டு எரியத்தான்
தூண்டல் வேண்டும், என்பது அவனுக்கு அப்போதுதான் புரிந்தது.

- நன்றி கல்கி 10.1.93 இதழ்

2 comments:

ரிஷபன் said...

எதுவுமே தானா வரணும் சரிதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் கவிதை, சிறுகதை, நிகழ்வுகள், விமர்சனம் & வெட்டிப்பேச்சு என பல தலைப்புக்ளில் கொண்டு வருவதால், 11.11.2009 வெளியிட்டுள்ள இது இன்று தான் 21.09.2010 (10 மாதங்கள் கழித்து) என் கண்ணில் பட்டுள்ளது.

நன்றாக உள்ளது.

தானாகக் கனியாத பழத்தைத் தடியால் அடித்து பழுக்க வைக்க முடியாது என்பதை உணர்த்தியது. இதுபோல நான் படிக்காத முத்துக்களும் ரத்தினங்களும் எங்கெங்கு மறைந்துள்ளதோ!