Sunday, March 28, 2010

முரண்பாடு....


எதிலுமே......
ஒளிவு, மறைவு
இல்லா
கவர்ச்சி நடிகை
ஜிகினாஸ்ரீ
வீட்டில்
ஐ.டி. ரெய்ட்..
சிக்கியது,
மறைத்து
வைக்கப் பட்ட
கறுப்புப் பணம்!!!!
*********************
தண்டச் சோறு,
வெட்டிப் பயல்
என்று,
பெற்றோர்
ஒதுக்கி வைத்த
பிள்ளைக்கு,
வேலை கிடைத்தது,
முதியோர் இல்லக்
காப்பாளராக !!!!
**********************
பசுமையான
வயல்களை,
அழித்து...
புதிதாய் நகர்
ஒன்று
எழுந்தது..
'வாடிய பயிர்
கண்டு வாடினேன்'
என்று பாடிய
வள்ளலார் பெயரில்..!!!!
***************************

7 comments:

ரிஷபன் said...

முச்சுவை.. கனிச்சுவை..

இராகவன் நைஜிரியா said...

// 'வாடிய பயிர்
கண்டு வாடினேன்'
என்று பாடிய
வள்ளலார் பெயரில்..!!!//

கலக்கல் அண்ணே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒளிவு மறைவில்லாதவர் முதல் முற்றும் துறந்த வள்ளலார் வரை அருட்பாக்கள் மூன்றுமே அருமை.

மதுரை சரவணன் said...

கவிதை அற்புதம். வாழ்த்துக்கள்

Chitra said...

நல்லா இருக்குங்க. கருத்துக்களுடன் அருமையான கவிதைகள்.

Dr. Srjith. said...

கவிதை அற்புதம் நல்ல கருத்து

Priya said...

அருமையான கவிதைகள்....வாழ்த்துக்கள்!!!