Thursday, December 31, 2009

எங்கிருந்தோ வந்து.............


பார்த்து,பார்த்து,
நம்பிக்கையான..
'நர்சரிகளி'ல் வாங்கி,
வேப்பம்புண்ணாக்கு,
'ஆர்கானிக் உரம்,
ஜீவாமிருதக் கரைசல்,
ஆட்டுப் புழுக்கை...
என்று
போஷாக்குக் கொடுத்து,
வளர்க்கப் பட்ட
ஒட்டு மரக் கன்றுகள்
எல்லாம்...
'சோமாலியா ' நாட்டு,
சோனி குழந்தைகள்,
போல்,
சுருங்கி விழ,
எங்கிருந்தோ வந்த
பறவையின்
எச்சத்தில்
விழுந்த விதை
ஒன்று,
விறுவிறுவென்று...
வளர்ந்து,,,
விருட்சமாய்
நின்றது !!

(இந்த கவிதை யூத்ஃபுல் விகடன் டிசம்பர் 2009 மின்னிதழில் வெளியானது.... )

2 comments:

வசந்தமுல்லை said...

அருமையான,அனுபவம் வாய்ந்த கவிதை, செடிகள் வளர்த்த அனுபவம் சொல்கிறது!!!!!!!!

அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010!!!!!

வசந்தமுல்லை said...

அனைவருக்கும் ஹாப்பி நியூ இயர் 2010!!!!!