Friday, December 31, 2010

வரவேற்போம்...புத்தாண்டை!!!!!!!!!



இல்லாமை இல்லாத நிலை பெற வேண்டும்
இறைவனே இன்று ஒரு வரம் தர வேண்டும்

கல்லாத மக்களுக்கு கற்பித்தல் வேண்டும்
எல்லார்க்கும் வேலை கிடைத்திடல் வேண்டும்

பொல்லாத சாதி சண்டை ஒழிந்திட வேண்டும்
பொறுமை எனும் குணம் இங்கு பொங்கிட வேண்டும்

தள்ளாடும் பாரதத்தை நிமிர்த்திடல் வேண்டும்
தரணியில் நம் புகழ் சுடர் விட வேண்டும்


மறுகி மயங்கியது போய், கருக வேண்டும் கீழ்மை, அருகி நின்ற நற்குணம் யாவும் மலர, வருக,வருக என வரவேற்போம்,புத்தாண்டை!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.

12 comments:

கே. பி. ஜனா... said...

Suprb!

சண்முககுமார் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இதையும் படிச்சி பாருங்க

உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்

ஹ ர ணி said...

வலிமை வேண்டும் வல்லமை வேண்டும்
தீயன யாவும் ஒழிதல் வேண்டும் தீதிலா
நன்மை பெருகவேண்டும்..இறைமை வேண்டும்
இயன்றவரை உதவுதல் வேண்டும்..நல்ல
எண்ணம் வேண்டும்..யாவும் நலமுடன் பேண
வேண்டும்...நம்பிக்கை வேண்டும் இந்த நாநிலம்
செழிப்புற அயராது உழைத்திட வேண்டும்
சத்தியம் வேண்டும் சரிந்திடா ஒழுக்கம் வேண்டும் நல்ல பிள்ளைகள் பெறுதல் வேண்டும் அவர்
நல் சமுதாயம் சமைத்திடவேண்டும்...
இந்தப் புத்தாண்டு எல்லாம் கொண்டுவரட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதையே நினைத்தால்,
நல்லதே நடக்கும் என்ற
நம்பிக்கையை வளர்ப்போம்.

புத்தாண்டைத் தாங்கள் வரவெற்ற பாடல் வரிகள் அருமையே;

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Please read வரவெற்ற as வரவேற்ற in my above comments.

பத்மநாபன் said...

பொறுமை எனும் குணமோங்க பாடிய கவிக்கு வாழ்த்துக்கள்...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

vasan said...

நல்ல‌ ம‌ன‌ம் வாழ்க
நாடு போற்ற‌ வாழ்க‌
அன்பு ஆர் ஆர் ஆர்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

இது போல மிகவும் பாசிடிவாக புது ஆண்டை கை கூப்பி வரவேற்போம் !!

அப்பாதுரை said...

முடியுமென்ற மனம் வேண்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்