Saturday, February 20, 2010

எல்லாம் விதிப்படி நடக்கும் !!


(எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்பதற்கு ஒரு பெரியவர் சொன்ன கதை இது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
----------

ஒரு வில்வ மரம். இரண்டு சிறுவர்கள் அந்த மரத்தில் ஏறி பூஜைக்காக வில்வ இலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கீழே நடந்த சம்பாஷணை அவர்கள் கவனத்தை ஈர்த்தது.
நெற்றி நிறைய பட்டை.கழுத்தில் ருத்ராக்ஷ கொட்டை. வயிறு ஒடுங்கி, கண்களில் ஏக்கத்துடன்,கிட்டத்தட்ட நம் திருவிளையாடல் தருமிபோல ஒருவன். எதிர்த்தாற் போல தசைகள் சுருங்கி..மங்கலான பார்வை..நடுங்கும் கை,கால்களுடன் ஒரு கிழவன்!
கிழவன்: எங்கே அப்பாபோகிறாய் ?
தருமி போன்றவன் : (போகும்போதே வாய் வைச்சுட்டானா..கிழவன்..அவ்வளவு தான் என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டே) என்ன விஷயம்?
கிழவன் : ஒண்ணுமில்ல..ரொம்ப அவசரமாப் போறியே..அதுக்காகக் கேட்டேன்.
த.போ : உங்களுக்கு விஷயம் தெரியாதா?
கிழவன் : என்ன விஷயம்?
த.போ : நம்ம பரிக்ஷீத் மஹாராஜாக்கு தக்ஷன் என்கிற சர்ப்பத்தினால கண்டமாம்.
இந்த பௌர்ணமிக்கு அவர் விதி முடியறது. அதை தடுக்கறதுக்காக அரண்மனை
போறேன்.
கிழவன் : உனக்கு விஷயம் தெரியாதா?
த.போ : என்ன?
கிழவன் : மஹா ராஜாவை எப்படி அந்த தக்ஷன் கடிப்பான்? அவர் தான் ஒரு மண்டபம்
கட்டி அதைச் சுற்றி அகழி. தவிர,நூற்றுக் கணக்கான வைத்தியர்கள்...விஷம்
இறக்கும் மந்திரக் காரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே இருக்கிறது. தக்ஷனால்
எப்படி முடியும்? அது சரி..நீ போய் அங்கு என்ன செய்ய போகிறாய் ?
த.போ : இவர்கள் இத்தனைப்பேர் இருந்தாலும் மஹா ராஜா என்ன சொல்லியிருக்கிறார்..
கிழவன் : என்ன சொல்லியிருக்கிறார்?
த.போ : ஐயா ....அப்படியே தக்ஷன் கடித்து விட்டாலும், அந்த விஷத்தை இறக்கி,
மஹாராஜாவைக் காப்பாற்றுபவர்களுக்கு பத்தாயிரம் வராகங்களும், ஐநூறு
கிராமங்களும் தருவதாக அரசாங்க முரசு அறிவிப்பவன் சொல்லிக் கொண்டுப்
போனானே நீங்கள் கேட்கவில்லையா...?
கிழவன் : சரி...அப்பா..ராஜாங்கத்தில் இத்தனைப் பேர் இருந்து செய்யமுடியாததை,
தனி ஆளாக நீ என்ன செய்யப்போகிறாய்?
த.போ : எல்லாராலும் முடியாத பட்சத்தில், நான் மஹாராஜாவின் உடலில் பாய்ந்த விஷம்
இறக்குவேன்..
கிழவன் : என்ன தம்பி விளையாடுகிறாயா? தக்ஷன் யார் தெரியுமா? சரி..சரி..வறுமை
கொடியது போலும்! அது தான் சாகத்துணிந்து விட்டாய்!!
த.போ : என்ன உளறுகிறீர்..நான் எதற்கு சாகத் துணியணும்? வறுமையில் தான் நான்
வாடுகிறேன். அந்த கொடிய வறுமையை, என் வித்வத்தினால் போக்கிக்
கொள்ள அரண்மனைக்கு சென்று கொண்டிருக்கிறேன்.
கிழவன் : ஐநூறு கிராமங்களை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?
த.போ : அது தான் யோசிக்கிறேன்...
கிழவன் : நல்லா யோஜனைப் பண்ணினே போ.. உன்னைப் பார்த்தா எனக்கு என் பேரனைப்
பார்க்கிறார்போல இருக்கு..பேசாம சொல் பேச்சு கேட்டுண்டு வீடு போய் சேர்.
செல்வம் இன்று வரும்..நாளை வரும். உயிர் வருமா..? தம்பி நீ ரொம்ப
காலம் வாழ வேண்டியவன். அல்பாயுசில போகாதே..இந்தா ஐநூறு வராகன்.ஊர்
போய் சேர்..
த.போ : உம்ம பிச்சை எனக்கு வேண்டாம்..
கிழவன் : யக்ஞம் ஒன்று செய்யப் போகிறேன். அதற்கு முன் தக்ஷிணையாய் இதை
வைத்துக் கொள்ளப்பா...
த.போ : எனக்கு எதுவும் வேண்டாம். ஆமாம் நீர் யார்?
கிழவன் : (ஒரு சிரிப்பு சிரித்து) நான் தான் தக்ஷன். இதோ இந்த வில்வ மரத்தினை வைத்து
பரிட்சை செய்து பார்த்து விடுவோம். இந்த வில்வ மரத்தில் என் சக்தி
முழுவதையும் பிரயோகிக்கப் போகிறேன். நீ இதை ஒரு சிறு செடியாய் துளிர்க்க
செய்தால் போதும்.என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்..
சரி...நீ தோற்றால்...
த.போ : நான் ஏன் தோற்கிறேன் ??
கிழவன் : சரி ..விதி வலியது..நீ என்ன செய்வாய் பாவம்!!
( தக்ஷன் விஸ்வரூபம் எடுத்தான். மிகப் பெரிய பத்து தலை நாகம். ஆக்ரோஷத்துடன் ஒவ்வொரு தலையும் அந்த வில்வ மரத்தினைக் கொத்த அதிலிருந்து ஆலகால விஷம் போல் புகையுடன் ஒரு பெரு நெருப்பு கிளம்பி, அந்த வில்வ மரம் சற்று நேரத்தில் பஸ்பம் ஆயிற்று. தக்ஷன மறுபடி
கிழ உருவம் எடுத்து அவனைப் பார்க்க, அந்த வித்யார்த்தி கொஞ்சம் கூட அலட்டிக்
கொள்ளாமல், எதோ மந்திரங்களை முணுமுணுத்து,துளி நீரை அந்த சாம்பல் குவியல் மேல்
தெளிக்க, என்ன ஆச்சர்யம். அது சிறிய செடியாய் துளிர்த்து, அடுத்த சில நாழிகையில் பெரிய
மரமாய் ஆகி விட்டது!! )
தக்ஷன் : (நடு நடுங்கி) அப்பா என்னை விட நீ பலசாலி. ஒத்துக் கொள்கிறேன். ஆனால்
பரீக்ஷத்தை முடிக்க வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. விதிப்
படி தான் எதுவும் நடக்கும். நடக்க வேண்டும். என் தலையில் உள்ள நாக
ரத்தினக் கற்களை எடுத்துக் கொள். மஹாராஜா கொடுப்பதாகச் சொன்னதை
விட விலை உயர்ந்த பொருள் இது. வாங்கிக் கொண்டு செல்..எனக்கு
நேரமாகிவிட்டது..
த. போ : ஆஹா... வாங்கிக் கொள்கிறேன். யார் கொடுத்தால் என்ன ? மேலும் விதியின்
போக்கில் குறுக்கிட நான் யார்?
( இவன் நாக ரத்னக் கற்களை வாங்கிக் கொண்டு ஊர் போய் சேர்ந்தான்...அங்கே பரீக்ஷ்த் மஹாராஜா நீராழி மண்டபத்தில் உட்கார்ந்திருக்க, கொஞ்ச நேரத்தில் அந்த அகழியில் ஒரு எலுமிச்சைப்பழம் மிதந்து வர, அதை மஹாராஜா ஆசையுடன் முகர்ந்துப் பார்க்க ..அது
சிறுபாம்பாய் உருமாறி, அவனைக் கொத்த நீலம் பாரித்து மஹாராஜா இறந்தான் என்று முடியும் கதை. இந்த விஷயம் உலகிற்கு எப்படி தெரிய வந்தது ??
அந்த வில்வ மரத்தில் இலைப் பறித்துக் கொண்டிருந்தார்களே... அந்த சிறுவர்கள் மூலம் வழிவழியாய் வந்ததாம் )

10 comments:

ரிஷபன் said...
This comment has been removed by the author.
ரிஷபன் said...

இந்த விஷயம் உலகிற்கு எப்படி தெரிய வந்தது ??
அந்த வில்வ மரத்தில் இலைப் பறித்துக் கொண்டிருந்தார்களே... அந்த சிறுவர்கள் மூலம்

இந்த விவரம் இப்பதான் எனக்குத் தெரிய வந்தது..

அண்ணாமலையான் said...

அட...

Chitra said...

ம்ம்ம்ம்............. நல்ல கதையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபனுக்கு மிக்க நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரே வரியில் முடித்து விட்டீர்களே..அண்ணாமலையான்...?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

THANKS MADAM!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ennellaamo paampukkathaiyellaam (putrilirunthu) eduththuvittup payamuruththivitteerkal. Eravil palli odinaalum paambo endru payamaaka uLLathu.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோபால கிருஷ்ணன் வருகைக்கு நன்றி !!

மோகன்ஜி said...

நல்லா இருக்கு சார் இந்த கதை. வலைமேயலில் உங்கள் வலைக்குள் தடுக்கி விழுந்தேன்.brilliant!