Tuesday, May 9, 2017

என்சைகிளைபிடிஐயா!

என்னை என்றுமே சைக்கிள் ஈர்த்ததில்லை ...
கையில் கொஞ்சம் காசு கிடைத்தால்,(அதாவது ஆங்கரை கிராமத்திலிருந்து செருதூரில் உள்ள LBHS செல்ல, பஸ்ஸிற்கு கொடுக்கும் பத்து காசு..நாங்கள் நடந்தே ஸ்கூல் போய் சேமிக்கும் பத்து பத்து காசுகள்!) அதை வாடகை சைக்கிள் காரனிடம் குடுத்து முட்டியை பெயர்த்து கொள்ளும் ஆசையெல்லாம் எனக்கு எப்பவுமே  கிடையாது..அந்த காசுகளை சேர்த்து, கிராமத்தில் ஒரு வீட்டு திண்ணையில் நண்பர்களுடன் கடை பரப்புவோம்..சாக்பீஸ் துண்டுகளை சம்பளமாக கொடுத்து சின்ன பசங்களை 'லவா லவா லக்கி ப்ரைஸ்' என்று கூவ செய்வோம்..
ஒரு பெரிய கார்டு போர்ட்..அதில் பாதி ஏரியாவுக்கு window display!
அதாவது, ஒரு ஸிம்பன்சி வால் பேப்பர்...ஒரு ஜீப்...கலர் சாக்பீஸ்..கொக்கு குண்டு (கோலி குண்டின் பெரியம்மா!)என்று பரிசு பொருட்கள் அலங்கரிக்க,மறு பாதியில் கலர் பேப்பர் எட்டு துண்டுகளாக மடிக்க வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா குடுத்து ஒரு பேப்பர் எடுக்கலாம்..பிரித்து பார்த்தால் முக்கால் வாசி மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் NP ( no prize) என்று எழுதி இருப்போம்..ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவர்களுக்கு ஆரஞ்சு பெப்பர்மெண்ட் வேண்டுமானால் கிடைக்கலாம்..அடுத்த சான்ஸ்க்கு இன்னொரு ஐந்து பைசா கொடுத்து தம்தம் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்த்துக்  கொள்ளலாம்...
எங்களிடம் ஏமாந்த எங்கள் கிராமத்தை சேர்ந்த சீமாச்சு என்கிற ஶ்ரீநிவாசன் ஐ ஐ டி யில் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்து, க்ரீன் கார்ட் வாங்கி, லாஸ் வேகஸ் காஸினோகளில் ஏமாந்திருக்கிறான் என்பது நான் உங்களுக்கு அளிக்கும் உபரி தகவல்!
     சேமித்து வைத்த காசுகள் இந்த முறையில் recycle ஆகுமேதவிர, மற்றபடி எனக்கும் சைக்கிளுக்கும் வேறு எந்த விதமான ஸ்நானப்ராப்தியும்   கிடையாது!
எதற்கு இவ்வளவு பில்டப் என்கிறீர்களா?
   ஏதோ சைக்கிளை பற்றி எழுத வேண்டுமென தோன்றிற்று!

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்.