Wednesday, January 27, 2016

பீஸ் பீஸ் ஆக ஆக்கும் பேஸ் புக்!

"சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு வந்ததும், சந்தி பண்றது"
"சரி"
"கடைக்குப் போய் மளிகை சாமான் வாங்கிண்டு வரணும்"
"மளிகை கடைக்கு போன் பண்ணேன் ப்ளீஸ்!"
"அது சரி,எப்ப பார்த்தாலும் என்ன FACE BOOK வேண்டி கிடக்கு?"
"இப்ப என்ன பண்ணனுங்கறே?"
"மில்லுக்கு போய் அரிசி மாவு திரிச்சிண்டு வரணும். FACE BOOK லேர்ந்து கொஞ்சம் எழுந்திருங்கோ!"
"FLOW நல்லா வரும், போது தான் DISTURB பண்ணுவ..ஒரு நிமிஷம் இரேன்,ப்ளீஸ்!"
"FLOW ஓ...BLOW ஓ...ஏதோ ஒண்ணு ஒங்களுக்கு நிச்சயம் கிடைக்கத் தான் போறது"
"என்ன சாபமா?"
"ஆமாம்,இங்கே வழியறது போறாதுன்னு,போன்லியும் வழிஞ்சாறது போல இருக்கு!"
"என்ன உளர்றே?"
"அதாரு, ஸ்நேகா...அஞ்சாறு மிஸ்டு கால்!"
எங்கே, என்று பரபரவென போனை எடுத்து,அந்த ஸ்நேகாவிற்கு கால் பண்ணினேன்...
"சாமி....நாந்தேன் பாம்பு புடிக்கற ஆறு முகம் பேசறேன்...எங்ஙன இருக்கீங்க? ஆறு மணிக்கு பாம்பு புடிக்க வரட்டுமா?"
கரகரப்பான கட்டைக்குரல் போனிலிருந்து வந்தது.
இங்கே, உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கும் உயிர் வந்தது!

4 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஸ்னேஹா... ஹாஹா.... :)

பீஸ் பீஸ் ஆக ஆக்கும் ஃபேஸ் புக்! ரசித்தேன்.

இராஜராஜேஸ்வரி said...

பாம்பு புடிக்கற ஆறு முகம் -ஸ்நேகாவா???!!

ஜீவி said...

எதற்கும் 'சிநேகா என்ற பெயர் கொண்டவர்கள் சீற வேண்டாம்' என்று ஒரு பின் குறிப்பு போட்டிருக்கலாம்..

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹாஹா! சூப்பர்!