Tuesday, October 4, 2011

நவராத்திரி கொலு !!!!!!!



நவராத்திரி கொலு !!!!!!!
எல்லா பொம்மைகளையும் வை(த்)து விட்டு, சற்று நிமிர்ந்தேன்!
பெண்டு வாங்கி விட்டது, வேலை!
ஒரு கற்பனை..
எல்லா பொம்மைகளுக்கும் உயிர் இருந்தால் எப்படி இருக்கும்?
முதல்ல நம்ம உயிர் போகாது!
“...தா ஃபெரெண்ட்ஸ்..ஜம்னு வந்து உட்கார்ந்துக்கங்க...” என்று சொன்னால் போதும்,
பாதிக்கு மேல் நம் வேலை மிச்சம்!
அதுங்களாக வந்து அவரவர் இடத்தில் அமர்ந்தால், எவ்வளவு செளகர்யம்!
அது அப்படி இல்லாமல்...
பீக் அவரில் நாம் பஸ் பிடிக்க ப்ரயத்தனப்படுவது போல, பொம்மைகளும் சீட் பிடிக்க
ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது?
செட்டியார், பிள்ளையார் சுண்டெலியை எட்டி ஒரு உதை உதைக்க..
பிள்ளையார் கையில் கிடைத்ததை எடுத்து செட்டியார் மேல் போட...
கடையில் உள்ள துவரம்பருப்பு, கடலை பருப்புகளை
ஆடு,மாடுகள் வாய் வைக்க..
செட்டியார் பாரியாள் மீது,
புலி ஒன்று பாய..
பரசுராமன் அதை தடுக்க.......
பக்கத்தில் இருந்த நரசிம்மம் ஹிரண்யனை விட்டு விட்டு,
விவசாயியை ஹதம் செய்ய முயல...
லபக்கென்று பூனை ஒன்று எலிக்குட்டியை பிடிக்க...
சோல்ஜர் ஒருவன் தன் .303 ரைபிள் ’பட்’டால், பூனை கழுத்தில் ஒன்று போட,
கல்யாண செட்டில் ஏக களேபரம்..தூரத்து மாமா ஒருவர் ராத்திரி படுக்க தலைகாணி
தரவில்லை என்கிற சொத்தை காரணத்தால், மாப்பிள்ளை பையனை உசுப்பேற்ற..
அஷ்ட லட்சுமிகளுக்குள் புடவை விஷயத்தில் தகராறு வர..
நாயனம் வாசிப்பவரை கடம் விதவான் தவுல் கம்பால அடிக்க....
நல்ல வேளை ...
அத்தனைக்கும் உயிர் இல்லை...
பொம்மைகள் தான்!
சமர்த்தாக அதனதன் இடத்தில் அமர்ந்து கொண்டு...
அத்தனையும் அப்படி இருப்பதால்...
பூஜனைக்குரிய மரியாதையுடன்..
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சுண்டலுடன்...
இப்படி பொம்மைகள் போல..
நமக்கு இருக்கத் தெரியாமல் தானே...
பேசத்தெரியாமல் பேசிக்கொண்டு...
ஏட்டிக்குப் போட்டியாய்..
ஏதாவது செய்து தொலைத்து..
வாங்கி கட்டிக் கொள்கிறோம்!
அத்தனை பூஜையும் நமக்கு!!
ஒரு பொமமையை பார்த்தேன்...
சிரித்தது..
சிரிக்க முயன்றேன்...
முடியவில்லை!
காரணம்..
முதுகு வலி!!!!

14 comments:

பத்மநாபன் said...

ரொம்பவே மாத்தி யோசிச்சிட்டீங்க... நல்லாருக்கு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே ஆரண்யநிவாஸ் ஸ்டைலில் நல்ல நகைச்சுவை. மிகவும் பிடித்தது, குபுக்கென உடனே சிரித்தது:

//அஷ்ட லட்சுமிகளுக்குள் புடவை விஷயத்தில் தகராறு வர..//

//ஒரு பொமமையை பார்த்தேன்...
சிரித்தது..
சிரிக்க முயன்றேன்...
முடியவில்லை!
காரணம்..

முதுகு வலி!!!!//


நவராத்திரி என்றால் சும்மாவா!
பொம்மைகளை எடுக்க, அடுக்க, கட்ட என
9*3=27 நாட்கள் தூங்க முடியாதே!

இந்த பொம்மனாட்டிகளை கையில் பிடிக்க முடியாதே!
சாதாரண நாட்களிலேயே பிடிபடமாட்டார்கள். இப்போது கேட்கவே வேண்டாம் என்கிறீர்களா?


அன்புடன் vgk

கௌதமன் said...

வித்தியாசமான கற்பனைதான்!

வெங்கட் நாகராஜ் said...

என்னவோர் கற்பனை... வித்தியாசமான சிந்தனை... நன்றாக இருக்கிறது உங்கள் கற்பனை....

ரிஷபன் said...

வித்தியாசமான கற்பனை

Rathnavel Natarajan said...

அருமை.
மிகவும் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

RAMA RAVI (RAMVI) said...

வித்யாசமான கற்பணை.சிரிக்க சிந்திக்க வைத்தது.

குறையொன்றுமில்லை. said...

நல்ல காமெடி கற்பனை. நல்லா சிரிக்க முடிஞ்சது.

கே. பி. ஜனா... said...

கற்பனை அசத்தலாக இருக்கிறது!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

பொம்மைகளை எடுத்து வைக்கும் போது இந்த கதை நினைவுக்கு வந்ததால் கை ஏனோ நடுங்கியது.....

RVS said...

வித்தியாசமான கற்பனை!! :-)

மனோ சாமிநாதன் said...

அருமையான, வித்தியாசமான கற்பனை!

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் சார்,தங்களின் இந்தப்பதிவைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும். நன்றி.

Madhavan Srinivasagopalan said...

//ஒரு பொமமையை பார்த்தேன்...
சிரித்தது..
சிரிக்க முயன்றேன்...
முடியவில்லை!
காரணம்..//

hmm.. I understand the reason.