Sunday, August 27, 2017

காலம் மாறலாம்..கௌரவம் மாறுமோ? நெவர்!

"என்னை என்ன 'ஹென் பெக்டு'ன்னு  நினைச்சியா?ஒன் லாக் பென்ஷன் வாங்கறவன்டா, நான்..ஒன் லாக் பென்ஷன் இங்க ஒங்கப்பனைத் தவிர எவனுக்கு  வர்றது?"
ப்ரஸ்டீஜ் பத்மனாப ஐயருக்கு இன்னொரு பெயர் துர்வாசர்..எதற்கெடுத்தாலும் முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும்..அதுவும் இந்த முதுமையில் ...அதுவும் .சாவித்ரியை அக்னிக்கு காவு கொடுத்த பின்,தன் இருப்பை காண்பிக்க  அவருக்கு இந்த கோபம்  மிக மிக தேவையாக இருந்தது.
"அப்பா,என்ன சொல்லிட்டேன்னு இப்டி கோச்சுக்கறேள்..ஒங்க நல்லதுக்குத் தானே.."
"என்னடா,எனக்கு நல்லது?பொண்டுகள் புழங்கற இடத்துல, தாழ்ப்பாள் போடாம குளிக்கச் சொல்றே? அறிவிருக்காடா நோக்கு?"
"அப்பா ப்ளீஸ் கத்தாதேள்...இந்த பாத்ரூம் ப்ளோர ஒட்டின கடங்காரன் சொல்ல சொல்ல கேட்காம, வழவழன்னு டைல்ஸ் பதிச்சுட்டான்..வழுக்கி விழுந்துடப் போறேள்னு தான்...தவிர, பாத்ரூம் பக்கத்து ரூமுக்கு யாரும் வர மாட்டா..அதனால தான்.."
"அப்ப நான் பாத்ரூம்ல வழுக்கி விழணுங்கறது தானே  நீ எதிர்பார்க்கிற?"
கிழட்டு சிங்கம் கர்ஜித்தது.
"ஐயோ..அப்பா..எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுக்காதேள்..ப்ளீஸ் .."
"போடா Fool!"
"தாத்தா,அப்பாவை முட்டாள்னு சொல்லாதேங்கோ?"
"ஆமா...பெர்ரீய மனுஷன் அப்பனுக்கு வக்காலத்துக்கு வந்துட்டான்..எனக்கு முன்னாடி ஒனக்கு ஒங்கப்பனை தெரியுமாடா?"
"ஆமாம்...ஒங்களுக்கு முன்னாடி,எனக்கு எங்கப்பாவைத் தெரியும்..என் முன்னாடி,எங்க அப்பாவை  நீங்க ஒண்ணும் சொல்லக் கூடாத்"
"ஓ!"
அந்த 'ஓ' வில் இப்போது இளக்காரம் இல்லை..கோபம் சட்டென பஸ்பமாகி,அன்பு அங்கு விஸ்வரூபமெடுத்து, பெரியவரின் விழிக்கற்றைகளில் கண்ணீர் துளிகளாய்  இறங்க....
இதற்கான என் குறள்:
....................................
அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்,மற்றெல்லா
பண்பிற்கும் அதுவே தலை!
(என் குறள்; என் கதை யிலிருந்து ....)


.........

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி வெங்கட்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கரந்தையாருக்கு கனிவான வணக்கமும்,வருகைக்கு நன்றியும்!

G.M Balasubramaniam said...

வயதானவர்களின் பண்பை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் சபாஷ்