Wednesday, September 2, 2015

"நான் ப்யூர் வெஜிடேரியன் என்று தெரியும்...என்னை எதுக்கு அவர் அந்த கேள்வி கேtட்டாரு?"
"சும்மா வம்பிளுக்கலாம்னு கேட்டுருப்பாரு....அவருக்கும் பொளுது போகணும் இல்ல.."
"அப்ப நான், சொன்ன பதிலை கேட்டு ஸ்ப்போர்ட்டிவ்வா எடுத்துக்காத,எதுக்கு விருட்டென்று 'ஒங்க சங்காப்தமே வேணாம்'னு கோச்சிகிட்டு போகணும்?"
"யப்பா...அப்டி  அவரை நீ என்ன கேட்டே?"
"நான் கேக்கலைப்பா...கேட்டது அவரு"
"சரி...அப்டி என்ன அவரு கேட்டாரு?"
"மீன் சாப்பிடும் போது,முள்ளு குத்தாம இருக்க, என்ன பண்ணனும் மாமூ?" ன்னு கேட்டாரு..
"அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?"
"செருப்பை போட்டுண்டு சாப்பிடுங்க மச்சான்"னேன்!

3 comments:

அப்பாதுரை said...

ஹிஹி..

G.M Balasubramaniam said...

இந்த ஜோக் எங்கோ கேட்டதுபோல் இருக்கே. ரசித்தேன்

நிலாமகள் said...

முடிப்பு தரும் சிரிப்பு!