Wednesday, September 25, 2013

கடவுள் மனிதனாய் பிறக்க வேண்டும்........!!!!!!!!!!




(முன் குறிப்பு : கண்ணதாசன் என்ற மாபெரும் கவிஞன், தன்னை GOVT.COMPANY STAFF ஆக குறுக்கிக் கொண்டு, GOVT.
AUDITOR களிடம் என்ன பாடு படுவான் என்கிற கற்பனையின் விளைவே இக்கவிதை..இது யார் மனதையாவது புண் படுத்தினால்,அவர்கள் ஏதாவது ஒரு பெட்டிக் கடைக்கு சென்று, என் பெயர் சொல்லி, கையில் உள்ள காசை கொடுத்து விட்டு சிகரெட் வாங்கி, அந்த புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றவும்!)
கடவுள் GOVT. COMPANY யில் பிறக்க வேண்டும்...
அவன் REPLY எழுதி, கை ஒடிந்து சாக வேண்டும்...
QUERY என்றால், என்னவென்று உணர வேண்டும்...
IR * என்றால் அலறிக் கொண்டு ஓட வேண்டும்...
எத்தனை QUERY கொடுத்தான்....
அத்தனைக்கும் REPLY செய்தான்...
அத்தனை REPLY யிலும் REJOINDER
எனும் பொடி வைத்தான்......
படுத்துவான்...
படுத்துவான்...
படுத்திக் கொண்டே தான் இருப்பான்...
பாவி அவன் ஆடிட்டரை படைக்காமல்
விட்டிருப்பான்.......
(மறுபடியும் பல்லவி)
கடவுள் GOVT. COMPANY யில் பிறக்க வேண்டும்...
அவன் REPLY எழுதி, கை ஒடிந்து சாக வேண்டும்...
----
* INSPECTION REPORT
(பின் குறிப்பு: என்னுடைய ‘சேட்டை’ மன்னிக்கப் படுவதாக!)

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா.....

ஆடிட்டர் எல்லாம் ரொம்பவே ஆட்டி வைச்சுட்டாங்க போல! :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

தற்சமயம் INTERNAL AUDIT இல் வேலைசெய்யும் நீங்களே இதுபோல எழுதலாமா?

நாங்கள் எழுதினால் மட்டுமே பொருத்தமாக இருக்குமாக்கும். ;)

G.M Balasubramaniam said...

கோபதாபங்களை கொட்டிக் கொள்ள இதுவும் ஒரு வழி. உங்களுக்குத் தெரியுமா. BHEL-ல்பாய்லர் இன்ஸ்பெக்டர்களிடமும் ,எக்ஸ்டெர்னல் இன்ஸ்பெக்டர்களிடமும் உற்பத்தித் துறையினரும் தரத் துறையினரும் படும் பாடு........?

இராஜராஜேஸ்வரி said...

பாவி அவன் ஆடிட்டரை படைக்காமல்
விட்டிருப்பான்.......

மறுபடியும் பல்லவியா...!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா