Saturday, August 13, 2011

இன்னும் ஒரு பெரியார் வேண்டும்!



இன்னும் ஒரு பெரியார் வேண்டும்,
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்..
பகுத்தறிவு பாசறை மூடியிருப்பதால்..
போக வழி தெரியாமல்
பிரச்னைகளைக் கொட்ட..
கோவிலுக்கு வந்து விடுகிறார்கள்..
அது என்ன கோவிலா.
.குப்பை மேடா?
இதில் பேரம் வேறு!
மேலும்,
சாமியைப் பார்க்க,
கட்டண சேவை!
கசாப்புக் கடையில் கூட,
கொசுறு கிடைக்கும்..
ஆனால்,
கோவிலில் கிடைப்பதில்லை..
கேட்டால் பூக் காண்ட்ராக்ட்,
முப்பது லட்சமாம்..
எங்கே சொல்ல..
நூறு ரூபாய் கொடுத்து,
தரிசனம் செய்து ..
மீண்டு வந்தால்,
மிஞ்சுவது..
நெஞ்சில் வேர்வை
மட்டும் தான்!!
ஆகவே இனி ஒரு பெரியார்
வந்து பகுத்தறிவு
வாசலைத் திறந்தால்..
பாதிக்கு மேல் ஓடி விடும்
பக்தர்கள் கும்பல்!!!

4 comments:

RVS said...

கோச்சுக்காதீங்க... ஊஹும்... உதாரணம் சரியில்லை சார்!!!

ஏதோ கோயில்ல யார் மேலையோ கோபம் உங்களுக்கு.... சரியா?

அப்பாதுரை said...

புரியலையே? பெரியார் இந்துக் கடவுளை வெறுத்த பகுத்தறிவுப்பாதி. கடவுளை வெறுப்பது பகுத்தறிவு என்றால் - which it is not. பெரியாருடைய எத்தனையோ உண்மையான முற்போக்குக் கொள்கைகளை விட்டு, கடவுளை செருப்பால் அடிக்கும் இந்த sensational கொள்கையை மட்டும் பிடித்துக் கொண்டுவிட்டோம். கழகத்தின் உபயம்.

அப்பாதுரை said...

actually... இதே மாதிரி பெரியார் என்றால் ஒன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம். பெரியார் கட்டுப்பாடு தேவை :)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

எங்கியோ இடிக்குதே.....